புதிய சம்பள நிர்ணய ஒப்பந்தம் – கூட்டுறவுத்துறை அமைச்சரிடம் கோரிக்கை!!!
புதிய சம்பள நிர்ணய ஒப்பந்தம் விரைவில் அமல்படுத்த வேண்டும் என்று மதுரை ரேஷன் கடை ஊழியர்கள் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய சம்பள நிர்ணயம்:
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய சம்பள நிர்ணய ஒப்பந்தம் மூலம் புதிய சம்பளம் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான புதிய ஒப்பந்தம் இன்னும் அமல்படுத்தாமல் உள்ளதால் ரேஷன் கடை ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
சுயதொழில் செய்ய மாணவர்களுக்கு கடன் உதவி
இதையடுத்து புதிய சம்பள ஒப்பந்தத்தை அமல்படுத்த கோரி கூட்டுறவு சங்கங்களின் சார்பாக, அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இது குறித்து கூட்டுறவு சங்கங்கள் சார்பாக கூறியதாவது,ரேஷன் கடை பணியாளர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.5 ஆயிரம். ஆனால் அதே பணியில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதனால் புதிய சம்பள நிர்ணய குழுவிடம் மற்ற பிரிவிற்கு இணையான சம்பளம், ஓய்வூதியம் வழங்குமாறு கோரப்பட்டு உள்ளது.
ஜனவரி 4 முதல் கல்லூரிகள் திறப்பு- மாநில அரசு அறிவிப்பு!
மேலும் தமிழக அரசு அறிவித்த பொங்கல் பொருள்கள் வழங்குவதால் வேலைப்பளு அதிகமாக உள்ளது. இதனால் ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும், ஊக்க ஊதியத்தை ஒரு ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தெரிவித்துள்ளோம். இவற்றை பரிசீலனை செய்து விரைவாக புதிய ஒப்பந்தத்தை விரைவில் அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.