மாநிலத்தில் இலவச ரேஷன் பொருட்கள் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு – முதலமைச்சர் முடிவு!
இந்தியாவில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரேஷன் பொருட்கள் மலிவான விலையில் வழங்கப்படுகின்றன. மேலும் உத்தரபிரதேச மாநிலத்தில் இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இந்த திட்டம் மார்ச் மாதத்துடன் முடிவடைய உள்ளதால் இந்த திட்டத்தை நீட்டிக்க உள்ளதாக அரசு முடிவெடுத்துள்ளது.
ரேஷன் பொருட்கள்
இந்தியாவில் அனைத்து மக்களுக்கும் உணவு பொருட்கள் கிடைக்கும் வகையில் ரேஷன் கடைகளில் மலிவான விலையில் உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. அத்துடன் தகுதியான நபர்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காக ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரேஷன் கார்டுதாரர்களின் கைரேகை பதிவை பயன்படுத்தி தகுதியான நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. அத்துடன் தகுதியான நபர்களுக்கு வழங்குவதை உறுதி செய்ய முடிகிறது. மேலும் இதன் மூலம் பல்வேறு வகையான முறைகேடுகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
TN TET தேர்வுக்கு விண்ணப்பித்து இருப்போர் கவனத்திற்கு – முழு பாடத்திட்டம் & தேர்வு முறை!
அத்துடன் தற்போது ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டம் நடைமுறையில் இருப்பதால் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இத்திட்டத்தின் மூலமாக யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை பெற முடிகிறது. அதாவது தங்களின் சொந்த ஊரை விட்டு வெளியூர் அல்லது வெளி மாநிலத்திற்கு சென்றாலும் தங்களின் கைரேகை பதிவை கொண்டு ரேஷன் பொருட்களை பெற முடியும். இதனால் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் பயன் அடைந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து உத்தர பிரதேச மாநிலத்தில் ஏழைகளுக்காக இலவச ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் அமலில் உள்ளது. இதனால் சாதாரண மக்கள் மிகவும் பயன்பெற்று வருகின்றனர். மேலும் இந்த திட்டம் மார்ச் மாதத்துடன் முடிவடைய உள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆலோசனையின் முடிவில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது, ரேஷன் கடைகளில் அமலில் உள்ள இலவச ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் நிறைவடைய உள்ளதால் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க உள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இதன் மூலம் அரசுக்கு 3,270 கோடி ரூபாய் செலவு ஏற்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.