ரேஷன் கார்டு பிரிக்கும் பணிகள் தீவிரம் – மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை!
தமிழகத்தில் 1000 ரேஷன் கார்டுகளுக்கு மேல் உள்ள கடைகள் மாநிலத்தில் 5 ஆயிரத்திற்கு மேல் உள்ளது. அதனை தொடர்ந்து 3 மாவட்டங்களில் ரேஷன் கார்டு பிரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
ரேஷன் கார்டுகள்:
கொரோனா தொற்றின் காரணமாக தமிழகத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்பபடாமல் இருக்கின்றன. ரேஷன் கடைகளிலும் காலிப்பணியிடங்கள் அதிகமாக உள்ளது. இதனால் ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகமாகியுள்ளது. அதனை தொடர்ந்து வேலூர் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் பிரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. 1000 ரேஷன் கார்டுகளுக்கு மேல் உள்ள ரேஷன் கடைகள் தமிழகத்தில் 5 ஆயிரத்திற்கு மேல் உள்ளதாக கூறப்படுகிறது.
இனி மாநிலத்திற்குள் நுழைய ஆர்டி-பிசிஆர் சான்றிதழ் அவசியம் – அரசு உத்தரவு!
அதனால் அவற்றை பிரிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனை தொடர்ந்து 1000 ரேஷன் கார்டுகளுக்கு மேல் உள்ள கடைகளை கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வேலூர் மாவட்டத்தில் 698 ரேஷன் கடைகளில் 4 லட்சத்து, 29 ஆயிரத்து, 234 ரேஷன் கார்டுகள் உள்ளன. ராணிப்பேட்டை மாவட்டத்தில், 614 ரேஷன் கடைகளில் 3 லட்சத்து, 31 ஆயிரத்து, 402 ரேஷன் கார்டுகள் உள்ளன.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 509 ரேஷன் கடைகளில் 3 லட்சத்து, 13 ஆயிரத்து, 692 ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த 3 மாவட்டத்தில் மொத்தம் 1,821 ரேஷன் கடைகளில் 10 லட்சத்து, 74 ஆயிரத்து, 328 ரேஷன் கார்டுகள் உள்ளன. இதில், வேலூர் மாவட்டத்தில் 102, திருப்பத்துாரில் 64, ராணிப்பேட்டையில் 65 என மொத்தம் 231 கடைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த கடைகளில் தலா 750 கார்டுகள் என ரேஷன் கார்டுகளை பிரித்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேறு இடங்களில் புதிய ரேஷன் கடைகள் அமைக்கப்படும்.
TN Job “FB Group” Join Now
இதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. கடைகளை மாற்றம் செய்வதற்கு முன் ரேஷன் கார்டுதாரர்கள் விருப்பம் கேட்கப்படும். இதற்காக 500க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் இருந்தால் பகுதி நேர ரேஷன் கடையில், 500க்கு மேல் இருந்தால் முழு நேர ரேஷன் கடையும் அமைக்கப்படும் என ஒன்றுபட்ட மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரிகள் கூறியுள்ளனர்.