இனி மாநிலத்திற்குள் நுழைய ஆர்டி-பிசிஆர் சான்றிதழ் அவசியம் – அரசு உத்தரவு!
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் அச்சம் காரணமாக தீவிரமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்திற்குள் அனைவரும் கொரோனா பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.
ஆர்டி-பிசிஆர் சோதனை:
கொரோனா தொற்றின் பரவல் முதல், இரண்டாம் அலை என்று தொடர்ந்து நாட்டு மக்களிடையே அச்சத்தை அதிகரித்து வருகிறது. தொடர்ந்து மூன்றாம் அலை பரவல் வரும் நாட்களில் இன்னும் அதிக பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இரண்டாம் அலையின் தாக்கம் கேரள மாநிலத்தை தவிர நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் குறைந்து விட்டது. ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.
யோனா SBI சேவை மூலம் வங்கிக்கணக்கு திறப்பு – சிறப்பம்சங்கள் வெளியீடு!
கொரோனாவின் முதல் மற்றும் இரண்டாம் அலையின் தாக்குதலின் போது நாட்டிலேயே ஆரம்ப கட்டத்தில் இருந்து மிகவும் அதிக பாதிப்பை உணர்ந்த மாநிலம் மகாராஷ்டிரா ஆகும். இதனால் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மகாராஷ்டிரா மாநிலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டது. இதன் விளைவினால் தற்போது மாநிலத்தில் பாதிப்பு குறைந்து உள்ளது. இருப்பினும், விரைவில் 3ம் அலை வைரஸ் தாக்கம் இருக்கும் என்று நிபுணர்கள் எசசரித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
மகாராஷ்டிரா மாநிலத்திற்குள் இனி, ஐரோப்பிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகள் அனைவருக்குமே ஆர்டி-பிசிஆர் பரிசோதனை சான்றிதழ் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுமையாக இரண்டு டோஸ் செலுத்தி கொண்டவர்களும் கண்டிப்பாக பரிசோதனை சான்றிதழ் இருந்தால் மட்டுமே மாநிலத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.