சொத்துவரி செலுத்துபவர்களுக்கு புதிய உத்தரவு.. ஜனவரி 31ம் தேதிக்குள் இதை செய்வது கட்டாயம்!
கோவை மாவட்டத்தில் வரி ஏய்பை தடுக்க நிர்வாகத்தால் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் வரி செலுத்தும் இணையதள மென்பொருள் முறைகளும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து அம்மாநகராட்சி ஆணையர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சொத்து வரி:
தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் சொத்து வரி உயர்த்தப்பட்டது. அத்துடன் நிலுவை சொத்து வரி குறித்தும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது குடியிருப்புதாரர்கள் மற்றும் சொத்து வரி செலுத்தாத சிறு குறு நிறுவனங்களின் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அத்துடன் நிலுவையில் உள்ள சொத்து வரியை வசூலிக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் வரியை ஏய்ப்பை தடுக்கும் வகையில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புதாரர்கள் தங்களது சொத்து வரி எண்ணுடன் குடும்ப அட்டை எண்ணை இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல வணிக நிறுவனங்கள் தங்களின் சொத்து வரி விதிப்பு எண்ணுடன் பான் எண் மற்றும் ஜிஎஸ்டி எண் குறித்த விவரங்களை இணைப்பது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இப்பணியை மேற்கொள்ள கடை உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்புதாரர்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களை நேரில் அணுக வேண்டும். அங்குள்ள சிறப்பு மையத்தில் ஜனவரி 31 ஆம் தேதிக்குள் ஆவணங்களை சமர்ப்பித்து சொத்து வரி விதிப்பு எண்ணுடன் குடும்ப அட்டை மற்றும் ஜிஎஸ்டி, பான் விவரங்களை இணைத்து கொள்ள வேண்டும் என்று கோவை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.