அதிகரிக்கும் கொரோனா BF.7 வைரஸ் பரவல்.. 5 நாடுகளின் பயணிகளுக்கு கட்டாய சோதனை – மத்திய அரசு காட்டம்!

0
அதிகரிக்கும் கொரோனா BF.7 வைரஸ் பரவல்.. 5 நாடுகளின் பயணிகளுக்கு கட்டாய சோதனை - மத்திய அரசு காட்டம்!
அதிகரிக்கும் கொரோனா BF.7 வைரஸ் பரவல்.. 5 நாடுகளின் பயணிகளுக்கு கட்டாய சோதனை - மத்திய அரசு காட்டம்!
அதிகரிக்கும் கொரோனா BF.7 வைரஸ் பரவல்.. 5 நாடுகளின் பயணிகளுக்கு கட்டாய சோதனை – மத்திய அரசு காட்டம்!

உலக நாடுகளில் தீவிரமாக BF.7 வகை வைரஸ்கள் பரவி பாதிப்புகளை அதிகப்படுத்தி வரும் நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் இந்தியாவில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை அதிகரித்து உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா பரவல்:

கொரோனா வைரஸின் பரவல் சீனாவில் மட்டும் தாக்கம் குறையாமல் தொடர்ந்து வந்த நிலையில், தற்போது அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளிலும் பரவி வருகிறது. மெல்ல தொடங்கிய தொற்று தற்போது தினசரி அதிக எண்ணிக்கையில் பதிவாகி வருகிறது. இந்நாடுகளில், BF.7 மற்றும் BF.12 என்ற வீரியம் அதிகம் உள்ள வைரஸ்கள் தான் பரவி வருகிறது. அதிர்ச்சி அளிக்கும் வகையில் குறிப்பிட்ட வகை திரிபு அடைந்த கொரோனா தொற்று தற்போது இந்தியாவில் 4 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சொத்துவரி செலுத்துபவர்களுக்கு புதிய உத்தரவு.. ஜனவரி 31ம் தேதிக்குள் இதை செய்வது கட்டாயம்!

Exams Daily Mobile App Download

இதனால் இந்தியாவில் தொற்று மேலும் பரவாமல் இருக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி வருகிறது. மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவர்கள், சீனா, ஜப்பான், தென்கொரியா, ஹாங்காங், தாய்லாந்து போன்ற 5 நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டாயம் கொரோனா சோதனை செய்து, தொற்று அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டால் அவர்களை தனிமைப்படுத்த உத்தரவிட்டுள்ளார். மேலும், அனைத்து மாநிலங்களிலும் கொரோனா நோயாளிகளின் சளி மாதிரிகளை சோதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!