கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற தேவையில்லை – முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!!
சீனாவில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த மாநிலத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற தேவையில்லை என முதல்வர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கொரோனா கட்டுப்பாடுகள்
சீனாவில் தற்போது மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி தற்போது பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையானது நாடு முழுவதும் பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இதன் காரணமாக தொற்று பரவல் அதிகரிக்கக்கூடும் என பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடத்தின் போது கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற தேவையில்லை என அம்மாநில முதல்வர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக முதல்வர் கூறியிருப்பதாவது, மாநிலத்தில் இதுவரை புதிய வகை கொரோனா மாறுபாடான BF7 தொற்று கண்டறியப்படவில்லை.
வீட்டில் இருந்த படியே உங்கள் ஆதாரில் டாக்குமெண்ட் அப்டேட் செய்யலாம் … எளிய வழிமுறைகள்!
Exams Daily Mobile App Download
அதனால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தவில்லை என்று கூறியுள்ளார். அத்துடன் BF7 வகை தொற்று கண்டறியப்பட்டால் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்த ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார். மேலும் கொரோனா பரவல் அதிகரித்தால் இதனை கண்காணிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.