தமிழகத்தில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு சிறப்பு ஊதியம் – அரசுக்கு கோரிக்கை!!
தமிழகத்தில் கொரோனா காலத்தில் அயராது உழைக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அவர்களின் தியாக உணர்வை பாராட்டி சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு ராமதாஸ் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்.
கோரிக்கை அறிக்கை:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிகமாக பரவி வருகிறது. ஒரு நாளில் மட்டும் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை 25,000 ஐ கடந்து விட்டது. இதனால் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பணிச்சுமை அதிகரித்து உள்ளது. இந்நிலையில் அவர்களின் நலன் கருதி தமிழக அரசுக்கு ராமதாஸ் அவர்கள் கோரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மே மாத சம்பளம் – அரசுக்கு வழங்க முடிவு!!
அதில், கொரோனாவிற்கு எதிராக தமிழகத்தில் முன்கள பணியாளர்களாக போராடி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் அதிகளவில் தொற்று பாதித்து உயிரிழக்கின்றனர். இவர்களின் தியாகத்திற்காக எனது வீர வணக்கங்கள். தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக தமிழகத்தின் அனைத்து மருத்துவமனைகளும் நிரம்பி வருகின்றது. நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது.
TN Job “FB Group” Join Now
இதனால் கடந்த ஆண்டு வழங்கப்பட்டது போல், இம்முறையும் அவர்களுக்கு சிறப்பு ஊதியம், தகுந்த ஓய்வு, பணியின் போது உயிர் தியாகம் செய்த மருத்துவ பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் நிதி உதவி, அவர்களின் நீண்ட கால ஓய்வூதிய கோரிக்கை அனைத்தையும் அரசு வழங்க வேண்டும். தமிழக அரசு மருத்துவர்களுக்கு அவர்களின் பணிக்காலத்தின் 5, 9, 11, 12 ஆகிய ஆண்டுகளில் காலம் சார்ந்த ஊதிய உயர்வும், பதவி உயர்வும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று தனது அறிக்கையில் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.