தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மே மாத சம்பளம் – அரசுக்கு வழங்க முடிவு!!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகமாக பரவி வருவதால் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் மன்றம் சார்பில் அனைத்து ஆசிரியர்களும் தங்களது மே மாத சம்பளத்தை கொரோனா நிவாரண நிதியாக வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நிவாரணம்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்திற்கு புதிதாக பதவி ஏற்றுள்ள திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள், தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
ஜூன் 7ம் தேதி வரை பொதுமுடக்கம் அமல் – மலேசியா அரசு அறிவிப்பு!!
மேலும் மக்களுக்கு தேவையான ஆக்சிஜன் வசதி, படுக்கை வசதிகள் உரிய நேரத்தில் தேவையானவர்களுக்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்தி கொள்வதற்காக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மன்றத்தின் சார்பில் மே மாத ஒருநாள் ஊதியத்தை தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அளிக்க முடிவெடுத்துள்ளோம்.
TN Job “FB Group” Join Now
எனவே இந்த மன்றத்தில் உள்ள ஆசிரியர், ஆசிரியைகள், மற்றும் அலுவலக பணியாளர்கள் தாமாக முன்வந்து நிதி வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜாக்டோ ஜியோ அமைப்பு மூலம் ரூ.150 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.