தமிழ்நாடு அரசின் பெண்களுக்கான வேலைவாய்ப்பு 2022 – ரூ.14,000/- சம்பளம்!
சமூகப்பணியாளர் பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை ராமநாதபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு ஆனது சமீபத்தில் வெளியிட்டது. இந்த அறிவிப்பின் படி, ஒப்பந்த அடிப்படையில் பெண் விண்ணப்பத்தார்களிடம் இருந்து விண்ணப்பங்கள் 20.08.2022 வரை வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பில் சமூகப்பணியாளர் பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் ஒரு பணியிடம் நிரப்பப்பட உள்ளது. 40 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் அரசு அலுவலராக இருந்து ஒய்வு பெற்று, அரசிதழில் கொள்கை வரைவு மற்றும் களப்பணி நடைமுறைப்டுத்துதல் தொடர்பாக பணி செய்த அனுபவம் உள்ளவராக இருந்தால், 62 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
பட்டதாரி /முதுகலை பட்டதாரி (10+2+3) பட்டம் பெற்றவர்கள் இவர்களில் உளவியல் / சமூகப்பணி / வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்துடன் குழந்தைகள் நலன் ,/ சமூக நலன் ,/ தொழிலாளர் நலம் சார்புடைய பணிகளில் 2 வருடம் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும். சமூகப்பணியாளர் பதவிக்கு மாதம் ரூ.14,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் தங்களுடைய சுய விபரங்களுடன் கூடிய விண்ணப்பத்தில் அனைத்து சான்றுகளின் நகல்களை இணைத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், நீதிமன்றம் தென்புறம், இராமநாதபுரம் -623 503 என்ற முகவரிக்கு 20-08-2022 -க்குள் கிடைக்குமாறு அனுப்பி வைத்தல் வேண்டும். 20-08-2022, 05.45 பிற்பகலுக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்படுகிறது.
Download Notification 2022 Pdf
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
No