ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் இருந்த 6 பேர் விடுதலை – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

0
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் இருந்த 6 பேர் விடுதலை - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் இருந்த 6 பேர் விடுதலை - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் இருந்த 6 பேர் விடுதலை – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

தமிழகத்தின் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கருப்பு தினமாக இன்றளவும் இருந்து வரும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்தவர்களுக்கான தீர்பை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு:

1991 ம் ஆண்டு தமிழகத்திற்கு வந்திருந்த ராஜீவ் காந்தி அவர்கள் குண்டு வெடிப்பு சம்பவத்தினால் உயிரிழந்தார். இந்த குண்டு வெடிப்பில் சம்பந்தபட்ட 7 பேரை கைது செய்து தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பல வருடங்களுக்கு பிறகு இவர்கள் தூக்கு தண்டனை ஆயுள் தண்டைனையாக குறைக்கப்பட்டது. நளினி, முருகன், சாந்தன், ஏ.ஜி. பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் இவர்களின் விடுதலைக்காக பல முறை கோரிக்கை மனுக்கள் உச்சநீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டது.

Follow our Instagram for more Latest Updates

ஆனால் அவை அனைத்தும் நிராகரிக்கப்பட்டது. பேரறிவாளனின் தாய் தொடர்ந்து தனது மகனை விடுதலை செய்ய நாட்டின் உயரதிகாரிகள், நீதிமன்றம் மற்றும் தலைவர்களுக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பிய வண்ணம் இருந்தார். இந்த 7 பேரும் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக சிறையில் தவித்து வந்தனர். இந்நிலையில், கடந்த மாதம் பேரறிவாளன் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து பேரறிவாளனை போன்று தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று சிறையில் இருந்த மற்ற 2 பேரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

தமிழக மக்களுக்கு எச்சரிக்கை.. நாளை வரை “ரெட் அலர்ட்” – வானிலை ஆய்வு மையம் தகவல்!

Exams Daily Mobile App Download

பேரறிவாளனை போன்று மற்ற 6 பேரும் தங்களின் நிவாரணங்களை கேட்பதற்கு தகுதியானவர்கள் என்று நீதிமன்றம் தெரிவித்து, இந்த வழக்கில் சிறையில் இருந்த நளினி, முருகன், சாந்தன், ஏ.ஜி. ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய 6 பேரையும் உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் இவர்களுக்கான விடுதலை என்பது காலம் தாழ்த்தப்பட்டு வழங்கப்பட்ட நீதி என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!