தமிழக மக்களுக்கு எச்சரிக்கை.. நாளை வரை “ரெட் அலர்ட்” – வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை வரை “ரெட் அலர்ட்” கொடுக்கப்பட்டுள்ளது.
ரெட் அலர்ட்:
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது நாளை (நவ. 12) காலை தமிழகம் புதுச்சேரி கடற்கரையை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இன்றும் நாளையும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதி கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
மேலும் ஒரு சில நிர்வாக காரணங்களுக்காக தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. இந்த ரெட் அலர்ட் அறிவிப்பு நாளை வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் வருகிற நவ 13 முதல் நவ. 15 வரை வட தமிழக கடலோர பகுதிகளில் மழை வெளுத்து வாங்கும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பெண்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை – ஆப்கானில் தலிபான்களின் புதிய உத்தரவால் பரபரப்பு!
Exams Daily Mobile App Download
அதனால் அன்றைய தினங்களில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் தமிழகத்தை பொறுத்தவரை டெல்டா மாவட்டங்களிலும், கடலூர் மாவட்டத்திற்கும் “ரெட் அலர்ட்” எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் வெள்ள பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் இருப்பவர்கள் 1913 மற்றும் 044-25619206 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now