கோபியை வம்பிழுத்த ராஜேஷ், சண்டையை பார்த்த செல்வி – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் ராதிகா கோபியை பற்றிய உண்மை எல்லாம் தெரிய வர ராதிகா கோபியை ஏற்றுகொள்ளாமல் இருக்கிறார். இந்நிலையில் கோபி மீண்டும் ராதிகா வீட்டிற்கு வர ராஜேஷ் அவரை பார்த்து விடுகிறார்.பின் கோபி ராஜேஷை அடிக்க செல்வி அதை பார்த்து பாக்கியாவிடம் சொல்கிறார்.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி பாக்கியாவின் கணவர் என்ற உண்மைக்கு பின் ராதிகா கோபியை வேண்டாம் என முடிவு செய்கிறார். கோபி பல முறை ராதிகாவை பார்க்க வீட்டிற்கு வர ஆனால் ராதிகா அவரை வெளியே தள்ளிவிடுகிறார். இந்நிலையில் இனியா டூர் வரவில்லை என கோபி மீது கோவமாக இருக்கிறார். மீண்டும் கோபி வராமல் குடும்பத்தில் அனைவரும் டூர் செல்கின்றனர். ஆனால் கோபி மீண்டும் ராதிகா மீது இருக்கும் ஞாபகத்தால் அவருடைய வீட்டிற்கு செல்கிறார்.
Exams Daily Mobile App Download
அங்கே ராதிகா கோபியை மறுபடியும் வெளியே தள்ளி கதவை மூடி விடுகிறார். அப்போது ராஜேஷ் அந்த பக்கம் வர கோபியை சந்தித்து என்ன உன்னை வெளியே தள்ளிட்டார்களா என கேட்கிறார். என்னை விட்டு உன்னிடம் பழகினாள் இப்போது உன்னை விட்டு வேறு யாரிடம் பழக இருக்கிறாள் என ராஜேஷ் கேட்க கோபிக்கு கோவம் வருகிறது ராஜேஷை ராதிகா வீட்டு வாசலில் பயங்கரமாக அடிக்கிறார். அப்போது அந்த பக்கம் வந்த செல்வி அதை பார்த்துவிடுகிறார்.
மறுவீடு சென்ற இடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விக்னேஷ் சிவன் & நயன்தாரா – எதற்காக தெரியுமா?
கோபி பழகும் பெண் ராதிகாவாக இருக்குமா என செல்விக்கு சந்தேகம் வருகிறது. அதனால் செல்வி இது பற்றி பாக்கியாவிடம் சொல்ல ஆனால் பாக்கியா அதை நம்பாமல் இருக்கிறார். இதற்கிடையே கோபி ராஜேஷ் சண்டையை பார்த்த அக்கம் பக்கத்தினர் ராதிகாவிடம் என்ன இப்படி எல்லாம் நடக்கிறது என கேள்வி கேட்கின்றனர். ராதிகா அதனால் மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறார். இனி வரும் எபிசோடுகளில் என்ன நடக்க இருக்கிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்.