அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – ராஜஸ்தான் முதல்வரின் சூப்பர் அறிவிப்பு!!

0
அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல் - ராஜஸ்தான் முதல்வரின் சூப்பர் அறிவிப்பு!!
அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல் - ராஜஸ்தான் முதல்வரின் சூப்பர் அறிவிப்பு!!
அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – ராஜஸ்தான் முதல்வரின் சூப்பர் அறிவிப்பு!!

ராஜஸ்தான் சட்டமன்றத்தில் இன்று மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டில், அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் வழங்கப்படுவது தொடர்பான அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார்.

பழைய ஓய்வூதிய திட்டம்:

நாட்டில் அரசு ஊழியர்களுக்கு கடந்த 2004ம் ஆண்டு முதல் பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து புதிய ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தில் கிடைக்கும் ஓய்வூதிய பலன்கள், பணிக்கொடை உள்ளிட்டவை கிடைப்பதில்லை என்பதால் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தமிழகத்தில் பொறியாளர்களுக்கு 1 வருட கால பயிற்சி – விண்ணப்பங்கள் வரவேற்பு!

மேலும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தியும் வருகின்றனர். அதன்படி தற்போது சில மாநிலங்களில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் ராஜஸ்தான் முதல்வர், கடந்த ஆண்டு அரசின் பட்ஜெட்டில் மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்திருந்தார்.

Follow our Instagram for more Latest Updates

இந்த நிலையில், ராஜஸ்தான் சட்டமன்றத்தில் இன்று மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டில்,‘சேமிப்பு, நிவாரணம், வளர்ச்சி’ என்ற கருத்தை அடிப்படையாக கொண்டு தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில், மாநிலத்தில் உள்ள பல்வேறு வாரியங்கள் மற்றும் நிறுவனங்களின் பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பலன்கள் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!