சந்தியா பையில் இருந்து விழுந்த விவாகரத்து பத்திரம், மோதிரம் மாற்றிக் கொண்ட திருமண ஜோடிகள் – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், சந்தியா பையில் இருந்து விவாகரத்து பேப்பர் தவறுதலாக கீழே சரவணன் முன்னால் விழுகிறது. முதலில் நிச்சயம் முடிந்த பின்னால் இது பற்றி பேசுவோம் என சரவணன் சொல்கிறார். பின்னர் நல்லபடியாக நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது.
ராஜா ராணி 2:
இன்று “ராஜா ராணி 2” சீரியலில், சந்தியாவின் பையில் விவாகரத்து பத்திரம் இருப்பதை எடுத்து பார்த்து சரவணன் வருத்தப்படுகிறார். பின்னர் எனக்கு இது பற்றி தெரியும் என காட்ட சந்தியாவிடம் பணம் தேவை உங்க பையில் பணம் இருந்தால் கொடுங்கள் அதை மீண்டும் திருப்பி தருகிறேன் என சரவணன் கேட்கிறார். உடனே சந்தியா என்ன திருப்பி தருவேன் என சொல்லிக்கிட்டு என சொல்லி பணத்தை எடுக்க பையை எடுக்கிறார்.
அதில் இருந்து விவாகரத்து பத்திரம் சரவணன் முன்னாள் விழுகிறது இது என்ன என சரவணன் கேட்க இது ஒன்றுமில்லை என சொல்லி சந்தியா சமாளிக்கிறார். சரவணன் கோவப்பட்டு நீங்க சொல்றீங்களா இல்லை நான் போய் பார்வதியிடம் கேட்கவா என சரவணன் மிரட்டுகிறார். விவாகரத்து நோட்டீஸ் என சந்தியா சொல்ல, அப்போ என்னிடம் உங்களுக்கு இது தான் தேவையா என சொல்லி, நிச்சயம் முடிந்ததும் இது பற்றி பேசலாம் என சரவணன் சொல்கிறார்.
சந்தியா இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என சொல்லி சமாளிக்க சரவணன் காதில் வாங்காமல் இருக்கிறார். அடுத்து என்ன நடக்கும் என்ற பதட்டத்தில் சந்தியா இருக்கிறார். பின்னர் உறவினர்கள் வர சர்க்கரையும் அழகாக உடை அணிந்து வருகிறான். அதன் பின்னர் மாப்பிள்ளை வீட்டில் இருந்து வந்துவிட்டனர் என செந்தில் சொல்ல அனைவரும் சென்று வரவேற்கின்றனர். கல்யாணம் செய்தால் உங்க பொண்ணை தான் கல்யாணம் செய்வேன் என பிடிவாதகமாக இருந்துவிட்டான் என மாப்பிள்ளையின் அம்மா பேசுகிறார்.
பார்வதி தயாராகி இருக்க அவரது தோழி ஒருவர் வருகிறார். என்ன பார்வதி திடீரென எல்லாம் நடக்கிறது என சொல்ல, அந்த விக்கி இவ்வளவு மோசமானவனா என அவர் தோழி பேசுகிறார். ஆமாம் அவன் கூடவே இருந்த எனக்கு கூட அதை பற்றி தெரியவில்லை என பார்வதி சொல்ல, நல்ல வேளை சந்தியா அண்ணி வந்ததால் நான் தப்பித்தேன் என சொல்கிறார். இன்னைக்கு ரெகார்ட் நோட் வைக்க வேண்டுமே என கேட்க நான் இனிமேல் கல்லூரிக்கு வர மாட்டேன். நிம்மதியாக கல்யாணம் செய்துவிட்டு இருக்க போறேன். நான் பாஸ் ஆகாத விஷயம் யாருக்கும் தெரியாது என பேசிக் கொண்டிருக்கிறார்.
அப்போது அங்கே அர்ச்சனா வர இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அர்ச்சனா உன்னை அத்தை வர சொன்னார்கள் என சொல்ல பார்வதி கிளம்பி செல்கிறார். வந்தவர்களிடம் வணக்கம் சொல்லி இருக்க மாப்பிள்ளையின் அம்மா சுடிதார் வாங்கி வாங்கி வந்திருக்கிறார். நீ திருமணம் முடிந்த பின்னர் எந்த டிரஸ் வேண்டுமென்றாலும் போடலாம் என சொல்ல சிவகாமி சந்தியாவை புடவை தான் கட்ட வேண்டும் என சொன்னது ஞாபகம் வருகிறது.
ஆனால் ஜீன்ஸ் மட்டும் போடாத என மாப்பிள்ளையின் அம்மா நக்கல் அடிக்கிறார். பின்னர் நகை டிரஸ் மாத்தி வரும்படி சொல்ல, பார்வதி சுடிதாரில் வருகிறார். தட்டு மாத்தி நிச்சயம் செய்யப்படுகிறது. பாஸ்கர் பார்வதிக்கு மோதிரம் போட, பார்வதி பாஸ்கருக்கு மோதிரம் மாத்துகிறார். அதை பார்த்த அர்ச்சனா கோபத்தின் உச்சியில் இருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.