பாரதியுடன் நெருக்கமாக இருக்கும் கண்ணம்மா, கோபத்தின் உச்சியில் வெண்பா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

0
பாரதியுடன் நெருக்கமாக இருக்கும் கண்ணம்மா, கோபத்தின் உச்சியில் வெண்பா - இன்றைய
பாரதியுடன் நெருக்கமாக இருக்கும் கண்ணம்மா, கோபத்தின் உச்சியில் வெண்பா - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!!
பாரதியுடன் நெருக்கமாக இருக்கும் கண்ணம்மா, கோபத்தின் உச்சியில் வெண்பா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மாவும் பாரதியும் அருகருகே அமர்ந்து சாப்பிட எதிரில் அமர்ந்த வெண்பாவை வெறுப்பேத்த கண்ணம்மா பாரதியுடன் நெருக்கமாக இருக்கிறார். அதை பார்த்த வெண்பா வீட்டிற்கு சென்று தற்கொலை செய்ய உள்ள, அங்கே பாரதி வந்து அவரை காப்பாற்றுகிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், குடும்பத்தினர் திட்டத்தின் படி கண்ணம்மாவும் பாரதியும் அருகருகே அமர்ந்து சாப்பிடுகின்றனர். அவர்களுக்கு எதிரே வெண்பா அமர்ந்திருக்கிறார். இத்தனை நாள் கல்யாணம் ஆன மாதிரி நடிச்ச இப்போ இருக்கு என கண்ணம்மா திட்டமிடுகிறார். பாரதியை உரசிக் கொண்டு அமரவும், லட்சுமிக்கு பாரதி முன்னாள் சென்று ஊட்டுவதும் என இருக்கிறார். அதை பார்த்து வெண்பா கோவப்பட்டு அப்பளத்தை உடைக்கிறார்.

அதை அஞ்சலியும் சௌந்தர்யாவும் கோபத்துடன் பார்க்கின்றனர். அஞ்சலியின் அம்மா இரண்டு மாப்பிளைகளையும் அழைத்து அடுத்த வருடம் சாப்பாடு போடலாம் போல என சொல்லி சந்தோசப்படுகிறார். சாப்பிட்டு முடித்துவிட்டு கை கழுவ செல்ல அங்கே சௌந்தர்யா பாரதி மீது தள்ளி விடுகிறார். உடனே கோவப்பட்டு பாரதி, ஆமாம் எனக்கும் வெண்பாவிற்கும் கல்யாணம் ஆகவில்லை அதற்காக இனிமேல் செய்யாமல் இருக்கமாட்டேன் என நினைக்காதே என சொல்கிறார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதல் ‘ரோஜா’ சீரியல் வரை இன்றைய ப்ரோமா – ரசிகர்களின் கமெண்டுகள்!

இதையெல்லாம் பார்த்த வெண்பாவும் சுந்தரியும் என்ன இப்படி நடக்கிறது. இந்த அஞ்சலி வேண்டுமென்றே சொல்லி வந்தவங்க முன்னால் அசிங்கப்படுத்தி இருக்கிறாள் என கோபத்துடன் பேச, அவளை ஒரு டோஸ் கொடுத்தது பத்தாது இரண்டு டோஸ் கொடுத்த தான் சரி ஆகும் என திட்டமிட்டு அஞ்சலியிடம் சென்று இரண்டு டோஸ் மாத்திரை சாப்பிட சொல்கிறார். கண்ணம்மா சௌந்தர்யாவை தேட அவர்கள் கிளம்பிவிட்டார்கள் என கண்ணம்மாவின் தந்தை சொல்கிறார்.

வீட்டிற்கு வந்த கண்ணம்மா இரட்டை குழந்தை பற்றி நினைத்து கொள்கிறார். அப்போது லட்சுமி தூக்கத்தில் ஹேமா பற்றி நினைக்க, நான் இரட்டை குழந்தை பற்றி நினைத்தால் எனக்கு ஹேமா ஞாபகம் தான் வருகிறது என நினைத்து பார்க்கிறார். பின்னர் வெண்பா வளைகாப்பு நிகழ்ச்சியில் அசிங்கப்பட்டதை நினைத்து அழுது கொண்டிருக்கிறார். பாரதிக்காக ஹேமா என்கிற ஒருத்தியை கொலை செய்திருக்கேன் ஆனால் இன்னும் அவன் என்னை திருமணம் செய்யமாட்டேங்கிறான் என அழுது, இனிமேல் நான் உயிரோடு இருக்க மாட்டேன் என துப்பாக்கி வைத்து சுட போகிறார்.

மீண்டும் லட்சுமி ராமகிருஷ்ணனை கலாய்த்த வனிதா – பிக் பாஸ் சீசன் 5 அப்டேட்!

அப்போது அங்கே பாரதி வந்து துப்பாக்கியை பிடிங்கி காப்பாற்றுகிறார். உன் குடும்பத்தினர் இல்லாத போது கூட உனக்காக நான் இருந்தேன் ஆனால் எனக்கு இனி எதுவும் செய்யவில்லை என்னை திருமணம் செய்யவும் போறதில்லை என சொல்லி அழுகிறார். நீ அங்கே வந்தது தான் தப்பு என பாரதி சொல்லி,அந்த கண்ணம்மா மீது நான் சாகும் வரை கோவமாக தான் இருப்பேன் என சொல்லி துப்பாக்கியை கையோடு எடுத்து செல்கிறார். அதன் பின்னர் வெண்பா சிரித்துக் கொண்டே நான் சாக சென்றாலும் நீ காப்பாற்ற வந்துவிடுகிறாய் பாரதி என சொல்லி சிரிக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!