கண்ணனுக்கு வேலை தர சொல்லும் மீனா, சூப்பர் மார்க்கெட்டுக்கு அழைக்கும் ஜனார்த்தனன் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மீனாவின் அப்பா சூப்பர் மார்க்கெட்டில் கண்ணனுக்கு வேலை தர முடியுமா என கேட்டதற்கு ஜனார்த்தனன் முடியாது என சொல்லிவிடுகிறார். பின்னர் மீனாவை கேட்க சொல்கிறார் ஜீவா.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணனுக்கு மீனாவின் அப்பாவின் சூப்பர் மார்க்கெட்டில் வேலை தர முடியுமா என கதிர் கேட்கிறார். ஆனால் ஜனார்த்தனன் அவன் மீது நம்பிக்கை இல்லை என்பதால் வேலை தரமாட்டேன் என சொல்கிறார். பின்னர் ஜீவா வீட்டிற்கு வந்து மீனாவிடம் ஒரு உதவி கேட்கிறார். மீனா என்ன என்று கேட்க கண்ணன் வேலை இல்லாமல் இருக்கான் உன் அப்பா சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்கு எடுக்க சொல்லு என கேட்கிறார்.
உடனே மீனா போன் செய்து பேச அவர் நீயும் மாப்பிள்ளையும் உத்தரவாதம் கொடுத்தால் வேலைக்கு எடுப்பதாக சொல்கிறார். பின்னர் முல்லை பருப்பு உருண்டை குழம்பு வைக்க அந்த வாடைக்கு மீனா வருகிறார். அப்போது கண்ணன் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றனர். கண்ணன் இப்படி தான் குழம்பு வைத்தால் வருவான் இப்போது என்ன செய்கிறானோ, சாப்பிட்டானா இல்லையா என பேசுகிறார். அப்போது மீனா சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்கு எடுக்க சொல்லிருக்கேன் என சொல்கிறார்.
அதை கேட்டு தனம் முல்லை அதிர்ச்சி அடைகின்றனர். படிக்க செல்லாமல் வேலைக்கு போறானே என நினைத்து வருத்தப்படுகின்றனர். அதன் பின்னர் கண்ணன் ஐஸ்வர்யா பேசிக் கொண்டிருக்கின்றனர். கல்லூரி முதல் நாள் எப்படி இருந்தது என கண்ணன் கேட்கிறார். வேலை தேடிய விஷயத்தையும், கதிர் பார்த்ததையும் சொல்கிறார். ஜனார்த்தனன் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்பரை கண்ணன் வீட்டிற்கு சென்று அழைத்து வரும்படி சொல்கிறார்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதல் ‘ரோஜா’ சீரியல் வரை இன்றைய ப்ரோமா – ரசிகர்களின் கமெண்டுகள்!
அவர் கண்ணன் வீட்டிற்கு சென்று கூப்பிடுகிறார். நீங்க தங்கியிருக்கும் இடம் ஜனார்த்தனன் அண்ணன் சொல்லி தான் ஏற்பாடு செய்தது என சொல்கிறார். பின்னர் இருவரையும் வர சொன்னதாக சொல்கிறார். ஐஸ்வர்யாவும் உடன் கிளம்ப, அங்கே வேலைக்கு சரியாக ஆள் இல்லாமல் சிரமத்தில் உள்ளனர். பின்னர் கண்ணனும் ஐஸ்வர்யாவும் வர, ஜனார்த்தனன் கண்ணனை ஏன் இப்படி செய்தாய் என ஏசுகிறார். ஐஸ்வர்யாவிடம் உன்னை ஏமாற்றி கூட்டிக் கொண்டு வந்தன. உனக்கு விருப்பம் இல்லையென்றால் சொல்லு நான் பேசி உன் வீட்டில் விடுகிறேன் என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.