சிவகாமியிடம் புது வண்டி வாங்க இருப்பதாக சொல்லும் சரவணன், கிண்டல் செய்யும் ஆதி, செந்தில் – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!!

0
சிவகாமியிடம் புது வண்டி வாங்க இருப்பதாக சொல்லும் சரவணன், கிண்டல் செய்யும் ஆதி, செந்தில் - இன்றைய
சிவகாமியிடம் புது வண்டி வாங்க இருப்பதாக சொல்லும் சரவணன், கிண்டல் செய்யும் ஆதி, செந்தில் - இன்றைய "ராஜா ராணி 2" எபிசோட்!!
சிவகாமியிடம் புது வண்டி வாங்க இருப்பதாக சொல்லும் சரவணன், கிண்டல் செய்யும் ஆதி, செந்தில் – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!!

விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், சந்தியா தியேட்டரில் நடந்தது பற்றி கவலையில் இருக்கிறார். பின் புதிதாக வண்டி வாங்க இருப்பதாக சரவணன் சிவகாமியிடம் சொல்கிறார்.

ராஜா ராணி 2:

இன்று “ராஜா ராணி 2” சீரியலில், சரவணன் வண்டி ஸ்டார்ட் ஆகாமல் இருக்க, சந்தியா எதையோ நினைத்து கொண்டு அமர்ந்திருக்கார். பின் சரவணன் அருகில் வர என்ன யோசித்துக் கொண்டு இருக்கீங்க என கேட்க, தியேட்டர் சென்று அனைவரும் சந்தோசமாக இருக்கலாம் என நினைத்தால் இப்படி ஆகிவிட்டதே என நினைத்து வருத்தப்படுகிறார். பின் சரவணன் ஏன் வண்டியை தள்ளிக் கொண்டு வருகிறார் என கேட்க, ஸ்டார்ட் ஆகவில்லை என சொல்கிறார். சந்தியா சரவணனிற்கு கை அமுக்கிவிட்டு புதிய வண்டி வாங்கலாம் என சொல்கிறார்.

கதிரை அசிங்கப்படுத்திய மல்லி, சண்டைக்கு வந்த முல்லை – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

பின் பார்வதிக்கு பாஸ்கர் போன் செய்கிறார். நாளை நேரில் பார்க்க வேண்டும் என சொல்லி போனை வைக்கிறார். சிவகாமியும் சுந்தரமும் படுக்க செல்ல, படம் பார்க்க சென்ற இடத்தில் இப்படியா பாதியில் வருவ என்ன தான் பிரச்சனை என சுந்தரம் கேட்க, நம்ம குடும்ப மானம் போனது எனக்கு தான் தெரியும் என சொல்கிறார். சின்ன சிறுசுகள் சந்தோசமாக இருக்கட்டும் என நினைத்து நீ படத்தை மட்டும் பாத்திருக்கலாம் என சுந்தரம் சொல்ல, சிவகாமி செய்தது தப்பு என நினைக்கிறார்.

பண மோசடி கும்பலை தேடி அலையும் எழில் , கோவத்தின் உச்சியில் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

மறுநாள் சந்தியா டீ போட்டுக் கொண்டுவர சரவணன் சிவகாமியிடம் புதிதாக வண்டி வாங்க இருப்பதாக சொல்கிறார். உடனே ஆதி மற்றும் செந்தில் சரவணனிற்கு வண்டி ஓட்ட தெரியாது என சொல்லி கிண்டல் செய்கின்றனர். உடனே சிவகாமி சரவணனிற்கு ஆதரவாக பேச, சந்தியா அவர்கள் பேசியதை நினைத்து வருத்தப்படுகிறார். பின் ஆதியை அழைத்து வண்டி ஓட்டுவது சாதாரண விஷயம் அதற்கு ஏன் அவனை அவமானப்படுத்துவது போல பேசுகிறாய் என கேட்க, நான் உண்மையை தான் பேசினேன் என ஆதி சொல்கிறார்.

உன் முன்னால் எப்படி அவர் ஓட்டிக் கொண்டு வருகிறார் என பாரு என சொல்கிறார். பின் கடைக்கு சென்று சரவணனிற்கு சாப்பாடு கொடுக்கிறார். அப்போது சரவணன் வண்டி எல்லாம் வேண்டாம் எனக்கு ஓட்ட தெரியாது என சொல்ல, அவங்க சொன்னதை கேட்டு நீங்க வாங்காமல் இருக்கீங்களா என சொல்கிறார். பின் பெட்ரோல் விலை அதிகரிக்கிறது என சொல்கிறார். அதன் பின் சந்தியாவும் சரவணனும் வண்டி பார்க்க சர்க்கரையிடம் சொல்லிவிட்டு செல்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!