பண மோசடி கும்பலை தேடி அலையும் எழில் , கோவத்தின் உச்சியில் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

0
பண மோசடி கும்பலை தேடி அலையும் பாக்கியா, கோவத்தின் உச்சியில் கோபி - இன்றைய
பண மோசடி கும்பலை தேடி அலையும் பாக்கியா, கோவத்தின் உச்சியில் கோபி - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!!
பண மோசடி கும்பலை தேடி அலையும் எழில் , கோவத்தின் உச்சியில் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பண மோசடி செய்தவரை கண்டுபிடிக்க எழில் தேடி அழைக்கிறார். பின் கோபி பாக்கியாவை பணம் கேட்டு யாரும் வர கூடாது, அப்படி வந்தால் உன்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பிருவேன் என சொல்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், எழில் பண மோசடி செய்தவர்களை தேடி அழைக்கிறார். அப்போது அமிர்தா அம்மாவிற்கு உடல்நிலை சரி இல்லாமல் போகிறது. உடனே அவர் எழிலிற்கு போன் செய்ய அவர் பதட்டத்தில் கட் செய்கிறார். பின் கோபி பணம் மோசடி செய்ததை நம்ம பையன் எப்படி கண்டுபிடிப்பான் என கேட்கிறார். நாளைக்கு ஒரு நாள் தான் நேரம் யாரும் பணம் கேட்டு இந்த வீட்டு வாசலில் வந்து நிற்க கூடாது. இது உன் திமிரால் வந்த பிரச்சனை அதனால் நீ தான் சமாளிக்கனும் இந்த வீட்டிற்கும் அதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என சொல்கிறார்.

நாளை வீட்டு வாசலில் வந்து யாரவது இருந்தால் அவ்வளவு தான் உன்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பிருவேன் என சொல்கிறார். உடனே கோபியின் அப்பா சத்தம் போட இவளை என் தலையில் கட்டி வைச்சீங்க அதனால் எல்லாம் அனுபவித்து தான் ஆக வேண்டும் என சொல்கிறார். பின் நீ இந்த வீட்டை விட்டு வெளியே செல்வது தான் ஒரே முடிவு என சொல்கிறார். பின் பாக்கியா கதறி அழுகிறார். அதை பார்த்து ஜெனி வருத்தப்பட்டு நான் என் அம்மாவிடம் காசு வாங்கி வருகிறேன் என சொல்கிறார். அப்போது செழியன் மற்றும் பாட்டி பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர்.

கதிரை அசிங்கப்படுத்திய மல்லி, சண்டைக்கு வந்த முல்லை – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

அவர்கள் பாக்கியாவிடம் வந்து சம்மந்தம் பண்ண வீட்டில் காசு வாங்க போறியா என கேட்கிறார். அப்போது அவர் நான் கேட்கவில்லை என சொல்ல, ஜெனி நான் தான் சொன்னேன் என சொல்கிறார். உடனே செழியன் ஜெனியை திட்டி அழைத்து செல்கிறார். பின் பாட்டி உன்னால் தான் இத்தனை பேருக்கு கஷ்டம் எழில் சாப்பிடாமல் இப்படி இருக்கிறார் என சொல்கிறார். பின் எழில் பண மோசடி செய்த கும்பலை தேடி ஆந்திரா வரை வருகிறார்.

அங்கே போன் செய்தவர் அட்ரஸ் கண்டுபிடித்து வருகிறார். ஆனால் அங்கே வேறு ஒருவர் இருக்கிறார். பின் எழில் பாக்கியாவிற்கு போன் செய்கிறார். பாக்கியா எங்க இருக்க எழில் பணம் கிடைத்துவிடும் தானா என சொல்கிறார். ஆனால் எழில் பணம் கிடைத்துவிடும் என தைரியம் சொல்கிறார். எங்கே இருக்க என பாக்கியா கேட்க, நான் ரொம்ப தூரத்தில் இருக்கிறேன் என சொல்கிறார். நீ பத்திரமாக இரு பணம் கிடைக்கவில்லை என்றால் பரவாயில்லை என சொல்கிறார். பின் எழில் நண்பர் ஏன் அம்மாவிற்கு இப்படி நம்பிக்கை கொடுக்கிறாய் என கேட்கிறார்.

கண்ணம்மாவை விவாகரத்து செய்ய முடிவு செய்யும் பாரதி, அம்மாவை நினைத்து கவலைப்படும் லட்சுமி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

பின் பாக்கியாவிடம் கோபி வந்து எழில் எங்கிருந்தாலும் கிளம்பி வர சொல்லு என சொல்கிறார். பண மோசடி செய்யும் அனைவரும் மோசமானவர்கள் அதனால் அவனை வர சொல்லு என சொல்கிறார். பின் பத்திரம் கடைகாரர் பணம் கேட்டு வீடு வரை வந்து சண்டை போடுகிறார். பின் கோபி கோவப்பட்டு நாளைக்கு பணம் கொடுக்க முடியாது அனைவரும் சென்று போலீசில் புகார் அளிக்க போறாங்க அப்போ என்ன செய்வ என சத்தம் போடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!