பார்வதி இருக்கும் இடத்தை கண்டுபிடித்த சந்தியா – “ராஜா ராணி 2” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் பார்வதி கடத்தப்பட்டது தெரியாமல் குடும்பமே வருத்தத்தில் இருக்கின்றனர். பல இடங்களில் தேட சந்தியா போலீஸ் உதவியை நாடுகிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் பார்வதி கடையில் வைத்து கடத்தப்பட்டு இருப்பதை சந்தியா கண்டுபிடிக்கிறார்.
ராஜா ராணி 2:
ராஜா ராணி 2 சீரியலில் விக்கியின் திட்டங்களை தாண்டி பார்வதி பாஸ்கர் திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் குடும்பமே சந்தோஷத்தில் இருக்கின்றனர். பார்வதி மறு வீட்டிற்காக வர அப்போது கடையில் செல்வம் இருக்கிறார். செல்வத்தின் உண்மையான குணத்தை தெரிந்து கொண்ட பார்வதி அவரை பற்றி சரவணனிடம் சொல்ல வருகிறார். ஆனால் அதற்குள் செல்வம் பார்வதியை கடத்தி விடுகிறார். செல்வத்தின் உண்மையான முகம் பற்றி தெரியாமல் பாஸ்கர், பார்வதி இங்கே வந்தாளா என கேட்க, செல்வம் வரவில்லை என சொல்கிறார்.
முடிவுக்கு வரும் சித்தி 2, நாம் இருவர் நமக்கு இருவர் 2 & பிரபல சீரியல்கள் – ரசிகர்கள் அதிர்ச்சி!
பின் செல்வம் இனிமேல் பார்வதியை நீ பார்க்கவே முடியாது என நினைக்கிறார். சரவணன் பார்வதியை தேடி கடைக்கு வர ஆனாலும் செல்வம் இங்கே வரவில்லை என சொல்கிறார். அதை நம்பி சரவணன் சென்றுவிட குடும்பத்தில் அனைவரும் பார்வதியை காணாமல் தேடி அலைகின்றனர். ஆனால் எங்கே தேடியும் பார்வதி கிடைக்கவில்லை. சிவகாமி பார்வதிக்கு எதோ ஆபத்து வந்துள்ளதாக உணர்கிறார். இந்நிலையில் சந்தியா பார்வதியின் போனை ட்ராக் செய்கிறார்.
Exams Daily Mobile App Download
அப்போது பார்வதி போன் கடைசியாக கடையில் தான் காட்டுகிறது. அதனால் அனைவரும் கடைக்கு வந்து தேடி பார்க்கின்றனர். ஆனால் பார்வதி அங்கே இல்லை. பார்வதி கடத்தப்பட்டுள்ளதை அனைவரும் உணர்ந்து போலீஸ் உதவியுடன் பார்வதியை தேடுகின்றனர். அப்போது கடையில் பார்வதியின் உடைந்த வளையல் இருக்கிறது. அதை கொண்டு சென்று சந்தியா பாஸ்கரிடம் கேட்கிறார். ஆமாம் இது நான் பார்வதிக்கு வாங்கி கொடுத்த வளையல் தான் என சந்தியா சொல்கிறார். அதனால் பார்வதி இருக்கும் இடம் சீக்கிரம் தெரிய இருக்கிறது.