விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – செல்வத்தை கையும் களவுமாக பிடித்த சந்தியா!
இத்தனை நாட்களாக சரவணனின் கடையில் வேலை பார்த்துக்கொண்டே பார்வதியை கடத்தி அனைவரின் கண்ணிலும் மண்ணைத்தூவி வந்த செல்வத்தை சந்தியா கையும் களவுமாக பிடிப்பது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.
ராஜா ராணி:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ராஜா ராணி தொடரில் பார்வதியை சந்தியா காப்பாற்றுவாரா என சீரியல் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதாவது பார்வதியின் உடல் முழுக்க வெடிகுண்டை கட்டி திருவிழாக் கூட்டத்தில் வைத்து அந்த குண்டை வெடிக்க செய்து பல உயிர்களை காவு வாங்க தான் தற்போது செல்வம் பிளான் செய்து இருக்கிறார். வெடிகுண்டு வெடிப்பதற்கு முன்பாகவே சந்தியா பார்வதியை காப்பாற்றுவாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
முடிவுக்கு வரும் விஜய் டிவி “நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியல் – வெளியான இறுதிநாள் புகைப்படம்!
ஏற்கனவே உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக பார்வதியை மருத்துவமனையில் வைத்திருப்பதாக சந்தியா ஒரு ப்ளான் செய்தார். அதேபோல செல்வம் பார்வதி உண்மையை கூறிவிட்டால் அனைத்து பிளானும் சொதப்பி விடும் என பயந்து பார்வதியை கொலை செய்யலாம் என மருத்துவமனைக்கு வருகிறான். அப்போது சந்தியா மற்றும் போலீசார் அனைவரும் செல்வத்தை சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்தனர்.
Exams Daily Mobile App Download
ஆனால், செல்வம் முகக்கவசம் அணிந்து இருந்ததால் செல்வம் தான் அந்த குற்றவாளி என்பதை சந்தியா மற்றும் போலீசார் யாரும் கண்டுபிடிக்கவில்லை. இதன் பின்னர் போலீசாரிடம் இருந்து செல்வம் தப்பித்து சென்று விட்டார். தற்போது செல்வத்தின் பிளான்படி கோவில் திருவிழாவில் பார்வதியை வந்து இறக்கி விட்டுவிட்டார். பார்வதியை சந்தியா பார்த்து விடுவது போன்றும் பார்வதியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என சந்தியா செல்கிறார். இதற்கு நடுவே உண்மையான குற்றவாளி செல்வம் தான் என்பதை சந்தியா கண்டுபிடிப்பது போன்ற ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.