‘ராஜா ராணி 2’ சந்தியாவை பழி வாங்க சபதம் எடுக்கும் அர்ச்சனா – சீரியலில் அடுத்த திருப்பம்!
விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் அர்ச்சனா இதுவரை சிவகாமி குடும்பத்திற்கு செய்த அத்தனை பிரச்சனைகளும் தெரிய வர, இதற்கெல்லாம் காரணம் சந்தியா தான் என்று அவரை பழி வாங்க அர்ச்சனா சபதம் போடுவது போல அடுத்தகட்ட கதைக்களம் அமைய இருக்கிறது.
ராஜா ராணி 2
சமீப காலமாக ‘ராஜா ராணி 2’ சீரியல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த சில அதிரடியான காட்சிகள் கடந்த சில எபிசோடுகளில் வெளியாகி மக்களின் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது. அந்த வகையில் ‘ராஜா ராணி 2’ சீரியலில் சந்தியாவின் பெயரை சொல்லி இதுவரை சிவகாமி குடும்பத்திற்கு அர்ச்சனா செய்து வந்த எல்லா தவறுகளும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. அதுவும் ஒரே நேரத்தில் அர்ச்சனாவின் அனைத்து சதி திட்டங்களையும் தெரிந்து கொள்ளும் சிவகாமி, அவரை வீட்டை விட்டு துரத்தி விடுகிறார்.
ராதிகாவை திருமணம் செய்துகொள்ள தயாரான கோபி – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்த ட்விஸ்டு!
இப்போது அர்ச்சனா கர்ப்பமாக இருக்கும் காரணத்தை காட்டி அந்த வீட்டில் இருக்க பிளான் போடுகிறார். அதே போல அர்ச்சனா வயிற்றில் தன் வீட்டு வாரிசு வளருவதை நினைத்து, சிவகாமியும் அர்ச்சனாவை அங்கேயே தங்கி கொள்ளும் படி அனுமதி கொடுக்கிறார். இத்தனை பிரச்சனை நடந்ததற்கு பிறகு அர்ச்சனா திருந்துவாரா என்று பார்த்தால் அது தான் கிடையாது. ஏனென்றால், தனக்கு நடந்த அத்தனை அவமானத்திற்கும் சந்தியா தான் ஒரே காரணம் என்று எண்ணும் அர்ச்சனா இந்த பிரச்சனைகளுக்கு சேர்த்து வைத்து அவரை பழி வாங்க போவதாக கிளம்பி இருக்கிறார்.
BB Ultimate Promo | தாமரையுடன் வம்பிற்கு சென்ற சுஜா, பெரிதான பாடல் பிரச்சனை!
இது ரசிகர்கள் எதிர்பார்த்தது தான். அந்த வகையில் தற்போது ‘ராஜா ராணி 2’ சீரியலில் சந்தியாவை பழி வாங்க திட்டமிடும் அர்ச்சனா தனது வயிற்றில் வளரும் குழந்தை பிறப்பதற்கு முன்பாக, சந்தியாவை அந்த வீட்டை விட்டே துரத்தி விடுவதாக குழந்தை மீது சபதமெடுக்கிறார். இது தொடர்பான ப்ரோமோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வர, எவ்வளவு நடந்தாலும் இந்த அர்ச்சனா திருந்தாது என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.