அர்ச்சனா மீது சந்தேகப்படும் செந்தில், உண்மையை கண்டுபிடிப்பாரா? “ராஜா ராணி 2” ப்ரோமோ!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், சரவணன் சமையல் போட்டிக்கு செல்ல வைத்திருந்த விமான டிக்கெட் காணாமல் போனதால் அர்ச்சனா மீது செந்தில் சந்தேகப்படுகிறார். இது குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது.
ராஜா ராணி 2:
ராஜா ராணி 2 சீரியலில், சரவணன் முதல் சமையல் போட்டியில் வெற்றி பெற்றதால் இரண்டாவது சமையல் போட்டிக்கு நுழைவு சீட்டு மற்றும் விமான பயண சீட்டு ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து சிவகாமி சந்தோசமாக இருக்கிறார். பக்கத்துக்கு வீட்டு கவிதாவிடம் விமானத்தில் செல்ல இருப்பதாக அதை கவிதா நம்பாமல் இருக்க, சிவகாமி பார்வதியிடம் டிக்கெட் கொண்டு வந்து கொடுக்க சொல்கிறார். அவர் வைத்த இடத்தில் சென்று தேட அங்கே அது இல்லை.
விஜய் டிவி பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2 சீரியல்கள் இணையும் சிறப்பு எபிசோட் – ப்ரோமோ ரிலீஸ்!
உடனே சிவகாமியிடம் வந்து சொல்ல, அவர் அங்கே வைத்தது எங்கே போகும் என பதட்டமடைகின்றனர். பின் கவிதா சிவகாமி பொய் சொல்வதாக சொல்கிறார்.குடும்பத்தினர் அனைவரும் டிக்கெட் எங்கே சென்றிருக்கும் என தெரியாமல் தேடுகின்றனர்.மேலும் அர்ச்சனா பழைய கடைக்கு பொருள்கள் போட்டார் அப்போது தெரியாமல் போட்டிருக்க வாய்ப்பிருக்கிறதா என கேட்கிறார். இந்நிலையில் அடுத்த எபிசோட் குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்து வரும் ட்விஸ்ட் – வெளியான புகைப்படம்!
அதில், அர்ச்சனா பார்வதி தான் டிக்கெட் தொலைத்தார். ஆனால் அவரை ஒன்றும் சொன்னதில்லை இதுவே நான் செய்திருந்தால் எல்லாரும் என்னை எப்படி எல்லாம் பேசிருப்பீங்க என சொல்கிறார். உடனே செந்தில் அதுதான் எனக்கு சந்தேகமாக இருக்கிறது. நீ செய்யும் வேலைகளை எல்லாம் நான் உடன் இருந்து பாத்திருக்கிறேன் நீ எல்லாம் செய்வாய் என எனக்கு தெரியும் என அவர் சொல்ல, இப்போது மட்டும் ஏன் என்னுடன் இருக்காமல் இருக்கீங்க என அர்ச்சனா நினைக்கிறார்.