ஜோடியாக வீடு திரும்பிய சந்தியா & சரவணன், ஏற்றுக் கொள்ளும் சிவகாமி – ‘ராஜா ராணி 2’ ப்ரோமோ!
விஜய் டிவியில் பரபரப்புடன் ஒளிபரப்பாக்கிக் கொண்டிருக்கும் சீரியல் ராஜா ராணி 2. இதில் ஜோடியாக சந்தியா & சரவணன் வீடு திரும்புவது போன்ற ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது.
‘ராஜா ராணி 2’ ப்ரோமோ:
ராஜா ராணி சீரியலில் சந்தியாவின் தோழி செய்த தவறால் சந்தியா மீது சந்தேகம் கொள்ளும் சரவணன் அவருக்கு விவாகரத்து கொடுத்து வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார். பிறகு சரவணன் சந்தியாவை பேருந்தில் வழியனுப்பி வைக்கிறார். சந்தியா ஏறிச்சென்ற பேருந்து விபத்தில் சிக்கி விடுகிறது. ஆனால் சந்தியாவிற்கு அதனால் ஏதும் ஆகவில்லை. இதனை அறிந்த குடும்பத்தினர் வீட்டில் கவலையுடன் உள்ளனர்.
புதிய சீரியலில் களமிறங்கும் ‘பாரதி கண்ணம்மா’ நடிகை – ரசிகர்கள் வாழ்த்து!
விபத்தில் இருந்து மீண்டு இருவரும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவிக் கொள்வது போல ஏற்கனவே ப்ரோமோ வெளியாகி இருந்தது. இந்நிலையில் புதிய ப்ரோமோ ஒன்று வெளி வந்துள்ளது. அதில் சிவகாமி குடும்பத்தினர் அனைவரும் வாசலில் அமர்ந்துள்ளனர். அப்போது சந்தியா மற்றும் சரவணன் இருவரும் ஒன்றாக ஆட்டோவில் வந்து இறங்குகின்றனர். அதனை காணும் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைகின்றனர். மேலும் சந்தியாவை கட்டிக் கொள்ளும் சிவகாமி அவள் திரும்பியதால் மகிழ்ச்சி அடைந்திருப்பதாக கூறுகிறாள்.
மேலும் குடும்பம் முழுவதும் சந்தியாவின் வருகையால் அழுகையும் புன்னகையும் கொண்டுள்னர். இனி தான் இங்கு தான் இருக்க போவதாக சந்தியா கூறுகிறார். பின்னர் இரவு தங்கள் அறைக்குள் சந்தியாவின் கழுத்து வலிக்கு சரவணன் தைலம் தேய்த்து விடுகிறார். அதனை சந்தியா சந்தோஷத்துடன் ஏற்றுக் கொள்கிறார். பின்னர் இருவரும் சந்தோஷமாக இரவு முழுவதும் பேசிக்கொண்டு உள்ளனர். இவ்வாறு அந்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.