கண்ணம்மாவுடன் மீண்டும் சேர்ந்து வாழ நினைக்கும் பாரதி – அதிர்ச்சியில் வெண்பா! மகிழ்ச்சியில் குடும்பத்தினர்!
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் “பாரதி கண்ணம்மா” சீரியலின் லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.
பாரதி கண்ணம்மா
விஜய் தொலைக்காட்சியின் பாரதி கண்ணம்மா சீரியல் தான் எப்போதுமே டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தினை தக்க வைத்து வருகிறது. இதனால் இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இந்த சீரியலில் தற்போது கண்ணம்மாவிற்கு தனது இரண்டாவது குழந்தை பற்றி தெரிந்து விடுகிறது. இது குறித்து சௌந்தர்யாவிடம் கேட்டால் அவர் சரியாக சொல்லாமல் இருப்பதால் கோபம் அடையும் கண்ணம்மா வெண்பாவிடம் கேட்கிறார். வெண்பாவிற்கு உண்மை தெரியாது தான், ஆனாலும் கண்ணம்மாவை கெஞ்ச வைக்க வேண்டும் என்று அவரிடம் பொய் சொல்லி வருகிறார்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலை விட்டு பாதியில் விலகும் லட்சுமி அம்மா – வேதனையும், புலம்பலும்!
இப்படியாக இருக்க தற்போது ஒரு லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பாரதியிடம் ஒரு பேஷண்ட் வருகிறார். அவர் தனது அண்ணன் பற்றி கூறுகிறார். தனது அண்ணன் நல்லவர் தான் என்றும், தனது அண்ணி மேல் சந்தேகப்பட்டதில் இருந்து தான் மாறி விட்டார் என்று கூறுகிறார். இதனை கேட்கும் பாரதிக்கு என்னவோ போல ஆகி விடுகிறது. தானும் தேவையில்லாமல் கண்ணம்மாவை சந்தேகப்பட்டு விட்டோமோ என்று யோசிக்கிறார். அதனை வெண்பாவிடம் கூறவும் செய்கிறார். இதனால் மீண்டும் பாரதியும், கண்ணம்மாவும் சேர்ந்து விடுவார்களோ என வெண்பா கடுப்பாகிறார்.
அம்மா, அப்பா மீது வழக்கு தொடுத்துள்ள நடிகர் விஜய் – விசாரணை ஒத்திவைப்பு! ரசிகர்கள் ஷாக்!
உடனடியாக தனது வீட்டிற்கு சென்று விட்டு சௌந்தர்யாவிடம் தான் இத்தனை ஆண்டுகளாக கண்ணம்மாவை சந்தேகப்பட்டது தவறு தான் என்று கூறுகிறார். மீதமுள்ள வாழ்க்கையை கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் கூறுகிறார். இதனை கேட்டு குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சி அடைந்து விடுகின்றனர். பல ஆண்டுகளுக்கு பிறகு பாரதி இப்படி திருந்தி உள்ளது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.