சரவணனை சமையல் போட்டியில் ஜெயிக்க விடாமல் செய்யும் அர்ச்சனாவின் சதி திட்டம் – ‘ராஜா ராணி 2’ ப்ரோமோ!
ராஜா ராணி 2 தொடரில் தற்போது மிகவும் பரபரப்பான காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் சமையல் போட்டியில் கலந்து கொள்ளும் சரவணன் ஜெயிப்பாரா? இல்லையா? என்பது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.
ராஜா ராணி 2:
விஜய் டிவியில் தற்போது ராஜா ராணி 2 தொடர் மிகவும் சுவாரஸ்யமாக சென்று வருகிறது. தனது பையனுக்கு படிக்காத குடும்பத்தை மட்டும் பார்த்துக் கொள்ளும் படியான பெண் தான் மனைவியாக வர என்று நினைக்கும் சிவகாமிக்கு படித்து ஐபிஎஸ் அதிகாரியாக மாற வேண்டும் என்று கொள்கையுடைய பெண் மருமகளாக வருகிறார். சரவணன் படிக்காத காரணத்தால் படித்த பெண் ஆக உள்ள சந்தியாவிற்கு தன்னை பிடிக்காது என்று நினைத்து கவலைப்படுவார்.
‘பிக் பாஸ்’ சீசன் 5ன் வைல்ட் கார்டு அனுபவம் குறித்து மனம் திறந்த அபிஷேக் – வைரலாகும் வீடியோ!
ஆனால் சந்தியா சரவணன் தனது சமையல் கலையில் ஜெயித்து பெரிய ஆளாக வர வேண்டும் என்று உதவி செய்கிறார். இந்த குடும்பத்தில் இளைய மருமகளாக உள்ள அர்ச்சனா இவர்களின் அனைத்து முயற்சிகளையும் கலைக்கும் வகையில் எப்போதும் ஏதாவது செய்து வருவார். தற்போது சந்தியா, சரவணன் சமையல் போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்னைக்கு அழைத்து செல்கிறார். அங்கு ஆரம்பத்தில் இருந்து போட்டிகள் ஒவ்வொரு படியாக நடத்தப்படுகிறது. ஒரு கட்டத்தில் போட்டியை காண சரவணன் குடும்பத்தினர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று உணர்ந்த சந்தியா அவர்களை ஊரில் இருந்து வரவைக்கிறார்.
பாரதியுடன் பைக் ரெய்டு செல்லும் லட்சுமி – ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் அடுத்த ட்விஸ்டு!
சரவணனுக்கு இன்ப அதிர்ச்சியாக இவர்களின் வரவு உள்ளது. ஆனால் அர்ச்சனா மட்டும் எப்படியாவது இந்த போட்டியில் இவரை கலந்து கொள்ள விட கூடாது என்று எண்ணத்தோடு உள்ளார். இந்நிலையில், ஜிலேபி செய்யும் போட்டியில் சரவணன் தவறாக செய்வதை டிவியில் பார்த்து சிவகாமி பதறுகிறார். அதேபோல், சரவணனும் சந்தியாவும் செய்வதறியாமல் நிற்கின்றனர். இதற்கெல்லாம் காரணம் அர்ச்சனா தான் என்று ப்ரோமோ வெளியாகியுள்ளது. அந்த போட்டியில் கலந்து கொள்ளும் மற்றொரு பெண்ணுடன் சேர்ந்து தான் அர்ச்சனா இந்த வேலையை செய்கிறார். இதையும் மீறி சரவணன் போட்டியில் ஜெயிப்பாரா என்பதை பொறுத்திருந்து வரும் நாட்களில் காணலாம்.