‘பிக் பாஸ்’ சீசன் 5ன் வைல்ட் கார்டு அனுபவம் குறித்து மனம் திறந்த அபிஷேக் – வைரலாகும் வீடியோ!
விஜய் டிவி ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராக பங்குபெற்று வெளியேறி இருக்கும் அபிஷேக் பிக்பாஸ் வீட்டுக்குள் தனது 2வது அனுபவம் குறித்து முதன் முறையாக பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் அபிஷேக்
தற்போது 60 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் பிரபல யூடியூபர் அபிஷேக். இந்த சீஸனின் துவக்கத்தில் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்த அபிஷேக் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதுவரை பிக்பாஸ் வீட்டுக்குள் ஏற்பட்ட பல்வேறு குழப்பங்களுக்கு காரணம் என சொல்லப்பட்டு வந்த போட்டியாளர் அபிஷேக் திடீரென வீட்டை விட்டு வெளியேறியவுடன் பிக்பாஸ் களம் போரடிக்க துவங்கியது.
பாரதியுடன் பைக் ரெய்டு செல்லும் லட்சுமி – ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் அடுத்த ட்விஸ்டு!
இதையடுத்து இந்நிகழ்ச்சியின் வைல்ட் கார்டு போட்டியாளராக மீண்டுமாக பிக்பாஸ் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்த அபிஷேக் இந்த முறையும் குறுகிய நாட்களிலேயே வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இப்போது, வைல்ட் கார்டு அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ள அபிஷேக், ‘இந்த ‘பிக்பாஸ்’ சீஸனின் வைல்ட் கார்டு போட்டியாளராக கலந்து கொண்டது மகிழ்ச்சியான விஷயம் தான். பொதுவாக இந்த வீட்டுக்குள் இருக்கும் போது எல்லாரும் நண்பர்களாக தான் இருப்பார்கள்.
ஆனால் ஒரு சில பிரச்சனைகள் வரும் போது ஒருவர் மற்றொருவரை குத்தி விடும் சூழ்நிலையும் வரும். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பலரும் இதுவரை நண்பர்களாக தான் பழகி வருகின்றனர். இப்போது பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்கள் அனைவரும் நல்லவர்களா, கெட்டவர்களா என்ற நோக்கத்திலேயே பார்க்கப்படுகிறது. அது ஏனென்று தெரியவில்லை. நான் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க மாட்டேன் என கூறியது உண்மையான விஷயம்.
விஜய் டிவி “தமிழும் சரஸ்வதியும்” நக்ஷத்ராவிற்கு விரைவில் திருமணம் – ரசிகர்கள் வாழ்த்து!
டாஸ்கை பொறுத்தவரை நான் நன்றாக செய்கிறேன் என சொல்கிறார்கள். ஆனால் இதை நீ செய்யக்கூடாது என கூறுகிறார்கள். இது தான் எனக்கு புரியவில்லை. பிரியங்காவை நான் பயன்படுத்தவில்லை. ஆனால் டாஸ்க் என வரும் போது அவர் மற்றவர்களிடம் இறங்கி போவார். பிக்பாஸ் வீட்டில் அன்பு என்பது கெட்டவார்த்தையாக மாறி இருக்கிறது. ஆனால் அன்பு எப்போதும் அன்பு தான். அமீரை காதலிப்பதற்கு பாவனி ஒன்றும் பைத்தியம் கிடையாது’ என கூறியுள்ளார். இவரது இந்த பதிவு ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.