முடியை வெட்ட சொல்லும் உயர் அதிகாரி.. ட்ரைனிங்கில் படாதபாடு படும் சந்தியா – “ராஜா ராணி 2” ப்ரோமோ!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், சந்தியா ஐபிஎஸ் ட்ரைனிங்கில் தன்னுடைய பங்களிப்பை முழுமையாக கொடுத்து வருகிறார். இந்நிலையில் அவர் போட்டிகளில் சிறப்பாக வெற்றி பெற்றாலும், அவர் தலை முடியை இன்னும் வெட்டவில்லை என உயர் அதிகாரி திட்டும் ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது
ராஜா ராணி 2:
ராஜா ராணி 2 சீரியலில், மாமியார் சிவகாமி சம்மதத்துடன் சந்தியா ஐபிஎஸ் ட்ரைனிங்கில் இருக்கிறார். அவர் அங்கே தன்னுடைய முழு பங்களிப்பை கொடுத்து வருகிறார். பல போட்டிகள் அவருக்கு இருந்தாலும் அவர் தன்னுடைய முழு ஈடுபாடையும் செலுத்தி இருக்கிறார். மறுபக்கம் மாமியார் சிவகாமி சந்தியாவிடம் சிறப்பாக ட்ரைனிங் செய்தவர்களுக்கு வழங்க இருக்கும் கோப்பையை காட்டி இதை நீ எப்படியாவது வாங்கி, சொந்த ஊருக்கே போலீசாக வர வேண்டும் என சத்தியம் வாங்குகிறார்.
Follow our Instagram for more Latest Updates
மாமியாரிடம் செய்த சத்தியத்தை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் பல கஷ்டங்களை தாண்டி சந்தியா தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் சந்தியா நீளமான முடி வைத்திருப்பதால் உயரதிகாரி ஒருவர், சந்தியாவை உடனே முடி வெட்ட வேண்டும் என சொல்கிறார். ஆனால் சந்தியா மாமியாருக்கு பயந்து இன்னும் முடி வெட்டாமல் இருக்கிறார். தற்போது அது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
அக்மார்க் வில்லியாக மாறிய ராதிகா.. மாட்டிக்கொண்டதை உணரும் கோபி – பாக்கியலட்சுமி அப்டேட்!
Exams Daily Mobile App Download
அதில் அனைவருக்கும் குத்து சண்டை போட்டி நடைபெறுகிறது. அதில் எல்லா டீமில் இருந்தும் ஒருவர் கலந்து கொள்ள வேண்டும் என சொல்ல, சந்தியா போட்டி போட்டு அதில் வெற்றி பெறுகிறார். ஆனால் அவரை பாராட்டாமல் அந்த உயர் அதிகாரி சந்தியாவின் முடியை காட்ட சொல்கிறார். சந்தியா முடியை காட்ட, நான் சொன்னதை இன்னும் நீ செய்யவில்லையா உடனே நான் சொன்னதை செய் என அவர் சொல்கிறார். சந்தியாவிற்கு என்ன சொல்வது என தெரியாமல் இருக்கிறது.