அக்மார்க் வில்லியாக மாறிய ராதிகா.. மாட்டிக்கொண்டதை உணரும் கோபி – பாக்கியலட்சுமி அப்டேட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் தற்போது மகா சங்கமம் முடிந்துள்ள நிலையில், இனி வரும் எபிசோடுகளில் ராதிகா கதாபாத்திரம் வில்லியாக மாற இருக்கின்றார். அது குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது.
பாக்கியலட்சுமி ட்விஸ்ட்:
பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பும் விறுவிறுப்பும் கலந்த கதையுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் சென்ற வாரம் முழுவதும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துடன் இணைந்து மகா சங்கமம் நடத்தப்பட்டது. பொதுவாக இந்த சீரியலில் மகா சங்கமம் என்றாலே பெரிய ட்விஸ்ட் ஒன்று நடக்கும். அந்த வகையில் இந்த முறை மகா சங்கமத்தில் ராதிகாவை வில்லியாக மாற்றும் காட்சிகள் வைக்கப்பட்டது. அதாவது பாக்கியலட்சுமி சீரியலின் மற்ற மொழிகளில் ராதிகா கதாபாத்திரத்தை தொடக்கத்தில் இருந்தே வில்லியாக காட்டி வந்தனர்.
Follow our Instagram for more Latest Updates
ஆனால் தமிழில் மட்டும் தான் ராதிகா கதாபாத்திரத்தை பாக்கியாவின் தோழியாகவும், பாக்கியாவின் தொழில் தொடங்க அவரே முக்கிய பங்கு வகிப்பது போல காட்டப்பட்டது. அதனால் உடனே ராதிகாவை வில்லியாக காட்டுவது என்பது பெரிய சவாலாக இருந்தது. இந்நிலையில் தற்போது மகா சங்கமம் மூலமாக ராதிகாவை பாக்கியா அசிங்கப்படுத்துவது போல காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது. அதனால் ராதிகா சற்று நெகட்டிவ் ரோலாக மாறி இருக்கிறார்.
விஜய் டிவி போட்ட மாஸ்டர் பிளான் ஒர்க் அவுட் ஆகிடுச்சே.. சேனலை தூக்கி நிறுத்திய 2 சீரியல்கள் இதுதான்!
Exams Daily Mobile App Download
அது மட்டுமில்லாமல் இனி வரும் எபிசோடுகளில் ராதிகா கோபி குடும்பத்தை பழி வாங்க நினைக்கிறார். கோபியை இனியா உடன் பழக விடாமல் செய்வதும், ஈஸ்வரியை பார்க்கவிடாமல் செய்வது போன்ற காரியங்களை செய்ய இருக்கிறார். அதனால் கோபியின் பாடு திண்டாட்டமாகி, பாக்கியாவே ராதிகாவை விட மேல் என யோசிக்கும் அளவிற்கு கதையில் பல திருப்பங்கள் வர இருக்கிறது. மேலும் கோபிக்கு சாப்பாடு கூட கிடைக்காமல் போக, ராமமூர்த்தி சொன்னது போல உண்மையான நரகம் எது என்பது கோபிக்கு விரைவில் புரிய வர இருக்கிறது.