கைகலப்பில் முடிந்த அண்ணன் தம்பி சண்டை, செருப்பால் அடிக்க போன சரவணன் – “ராஜா ராணி 2” அதிரடி ப்ரோமோ!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் சிவகாமியை போலீசில் பிடித்துக் கொடுத்தது அர்ச்சனா தான் என்ற உண்மை தெரிய வருகிறது. இந்நிலையில் அண்ணன் தம்பிகளுக்கு இடையே கைகலப்பு ஏற்பட இருப்பது போல ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
ராஜா ராணி 2 ப்ரோமோ:
விஜய் டிவியில் இரவு 10 மணிக்கு ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியல் தற்போது எதிர்பாராத திருப்பங்கள் இனி வரும் எபிசோடுகளில் காட்ட உள்ளது. வீட்டிற்கு தெரியாமல் செந்தில் மற்றும் அர்ச்சனா குற்றாலத்திற்கு சென்று ஹோட்டலில் தங்குகின்றனர். அப்போது வீட்டில் அம்மாவிற்கு உடம்பு சரி இல்லை என சொல்ல அதை நம்பி சிவகாமி இருக்கிறார். ஆனால் உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் என சந்தியா மருத்துவமனைக்கு சென்று விசாரிக்க அங்கே யாருமே இல்லை அதனால் அர்ச்சனா மீது சந்தேகம் வருகிறது.
TN Job “FB Group” Join Now
மறுபக்கம் அர்ச்சனா செந்திலை போலீஸ் கைது செய்ய சரவணன் சென்று காப்பாற்றுகிறார். அவர் உண்மையை வீட்டிற்கு தெரியாமல் பார்த்துக் கொள்ள, அதற்குள் வீட்டிற்கு போலீஸ் வருகின்றனர். உங்களை கைது செய்ய பிரியா என்ற பெயரில் இருந்து புகார் வந்துள்ளதாக சொல்ல அது அர்ச்சனாவின் தங்கை என தெரிந்துக் கொள்கின்றனர். அதை நினைத்து சிவகாமி உடைந்து போகிறார். இந்நிலையில் அடுத்து வரும் பரபரப்பான திருப்பங்கள் குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
PF கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – முக்கிய அறிவுறுத்தல் வெளியீடு!
அதில் சரவணன் செந்தில் மீது கோவப்பட்டு அடிக்க போகிறார். அண்ணன் தம்பிகளின் சண்டையை குடும்பமே சேர்ந்து தடுக்கின்றனர். அப்போது அர்ச்சனா எதோ பேச உடனே பயங்கர கோவப்பட்ட சரவணன் அர்ச்சனாவை செருப்பை கழட்டி அடிக்க செல்கிறார். அதை பார்த்து குடும்பமே அதிர்ச்சி அடைகின்றனர்.