PF கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – முக்கிய அறிவுறுத்தல் வெளியீடு!
EPFO கணக்கு வைத்துள்ளவர்கள் தங்களின் கணக்கு சம்பந்தப்பட்ட விவரங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
EPFO :
இந்தியாவில் நிறுவனங்களில் வேலை செய்யும் ஒவ்வொரு ஊழியரும் EPFO கணக்கில் இணைந்துள்ளனர். அந்தந்த நிறுவனங்கள் வாயிலாகவே ஊழியர்களுக்கு EPFO கணக்கு தொடங்கப்படுகிறது. இதன் மூலம் மாதம் ஊதியத்தில் இருந்து குறிப்பிட்டத்தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தொகை அவர்கள் பெறும் சம்பளத்தை பொறுத்தது. இந்த தொகை பணி காலம் நிறைவடைந்த பின் மொத்தமாக நமக்கு திரும்ப கிடைக்கும். தற்போது தமது தேவைக்கேற்பவும் பணத்தை எடுத்து கொள்ளும் வசதியும் உள்ளது. ஓய்வு காலத்திற்குள் பணத்தை எடுப்பதால் அதில் கிடைக்கும் நன்மைகளை முழுமையாக பெற முடியாது.
TN Job “FB Group” Join Now
EPFO அமைப்பு அவ்வவ்போது பிஎப் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பிஎப் கணக்குதாரர்களுக்கு புதிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. EPFO கணக்கு வைத்துள்ளவர்கள் தங்களின் கணக்கு சம்பந்தப்பட்ட விவரங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் எச்சரித்துள்ளது. ஏனெனில் EPFO அமைப்பு என்ற பெயரில் மோசடி செய்யும் கும்பல் உறுப்பினர்களை தொடர்பு கொண்டு கணக்கு குறித்த முழு விவரங்களை கேட்டறிந்து பணம் கையாடல் செய்கின்றனர்.
மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – வீட்டு வாடகைப்படி உயர்வு!
இது குறித்து EPFO தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. சந்தாதாரர்களின் ஆதார் எண், UAN நம்பர், OTP, வங்கிக் கணக்கு எண் போன்ற சொந்த விவரங்களை EPFO அமைப்பு எப்போதும் கணக்குதாரர்களிடம் தொலைபேசி மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக கேட்டறிவதில்லை அதனால் தொலைபேசியில் பிஎப் கணக்கு குறித்த விவரங்களை பகிர வேண்டாம் ஏராளமான புகார்கள் மோசடி குறித்து வந்த வண்ணம் உள்ளது. அதனால் EPFO அமைப்பு இது போன்ற எச்சரிக்கையை விடுத்துள்ளது.