சந்தியாவிற்கு சமையல் கற்றுத் தரும் சரவணன் – இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்!!
விஜய் டிவி ” ராஜா ராணி 2″ சீரியலில் இன்று பார்வதி தனக்கு எதற்கு அவசரமாக கல்யாணம் என்று தனது அப்பாவிடம் பேசுகிறார். மறுபக்கம் சரவணன் சந்தியாவிற்கு சமையல் செய்வது எப்படி என கற்றுத்தருகிறார்.
ராஜா ராணி 2:
இன்று ராஜா ராணி 2 சீரியலில் அர்ச்சனாவும் அவரது கணவரும் கடையில் பேசி கொண்டிருக்கின்றனர். என்ன செய்தாலும் சந்தியா நல்ல பேர் வாங்கிவிடுகிறாள். இதுமட்டுமில்லால் இன்று கடையை சீல் வைத்துவிட்டு அதனை காப்பாற்றியது காரணமாக குடும்பத்துல எல்லாரும் அவ மேல ரொம்ப புகழ்ந்து பேசுறாங்க. அதுமட்டுமில்லாமல் அவ நடக்கப்போற சமையல் போட்டியில் கூட கலந்து கொள்ள போறாளாம் அவளை எப்படியாவது ஜெயிக்கவிடாம பாத்துக்கணும் என்று பேசிவிட்டு, அர்ச்சனாவின் தங்கைக்கு பார்த்த மாப்பிளை குறித்த விவரங்களை எடுக்கிறார்.
எப்படியாவது இந்த மாப்பிளையை என் தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணிடனும், அவங்க ரொம்ப வசதியானவங்க என்று பேசிக்கொண்டு, உங்க தங்கச்சி கல்யாணம் முன்பாகவே என் தங்கச்சி கல்யாணம் நடக்கணும் சொல்லிட்டேன் என்று கூறுகிறார். குடும்பத்தில் அனைவரும் அமர்ந்து பேச சந்தியா சரவணன் வருவதற்காக காத்துக்கொண்டிருக்கிறார். சரவணனின் அப்பா ஆள் அனுப்பி வர சொல்லவா என்று சொல்ல, சிவகாமி அவன் எதாவது வேலையாக இருப்பான் வந்துருவான் என்று பேச அனைவரும் படுக்க சென்றுவிட்டனர்.
சந்தியா மட்டும் சரவணன் வர காத்திருக்க சரவணன் லேட்டாக வருகிறார். உங்களுக்காக தான் காத்திருக்கிறேன் என்று சொல்ல எதுக்கு என்று சரவணன் கேட்கிறார். நீங்க சமைக்க சொல்லித்தரேன் என்று சொன்னீங்களே என்று சொல்லி இருவரும் சமையல் அறைக்கு சென்று சமையல் செய்ய தொடங்குகிறார்கள். சரவணன் இனிப்பு செய்ய தேவையான பக்குவங்களை சொல்லி தர காதல் பாடலுடன் எபிசோட் நகருகிறது. இந்த வீட்டில் நல்ல பேர் வாங்க எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள்.
ஹேமாவிடம் வீடியோ காலில் பார்த்து கண்ணீர் விடும் பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!
ஆனால் இதெல்லாம் தேவை இல்லை என சரவணன் நினைக்கிறார். சந்தியா தனியா எப்படி இதெல்லாம் செய்வேன் என வருத்தப்படுகிறார். சரவணன் ஆறுதல் தெரிவிக்க சந்தியா லட்டு செய்து காட்டுகிறார். அப்போது சரவணனின் அப்பா வந்து தான் மருமகள் செய்ய லட்டுவை சாப்பிட கேட்கிறார். சந்தியா இவளோ சொல்லி கொடுத்தது போதும் நானே செய்து பழகுகிறேன் என சரவணனை அனுப்புகிறார். இத்துடன் இந்த எபிசோட் முடிவடைகிறது.