ஹேமாவிடம் வீடியோ காலில் பார்த்து கண்ணீர் விடும் பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

0
ஹேமாவிடம் வீடியோ காலில் பார்த்து கண்ணீர் விடும் பாரதி - இன்றைய
ஹேமாவிடம் வீடியோ காலில் பார்த்து கண்ணீர் விடும் பாரதி - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!!
ஹேமாவிடம் வீடியோ காலில் பார்த்து கண்ணீர் விடும் பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் இன்று ஹேமாவை பிரிந்து சோகத்தில் இருக்கிறார் பாரதி. ஹேமாவிடம் வீடியோ காலில் பேசிவிட்டு, கண்ணம்மாவிற்கு செடி வாங்கி செல்கிறார். அதனை சௌந்தர்யா பின் தொடர்ந்து பார்த்து சந்தோஷமடைகிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில் ஹேமாவை கண்ணம்மா வீட்டில் விட்டுவிட்டு பாரதி இரவெல்லாம் துக்கம் வராமல் சௌந்தர்யா போனை அவருக்கு தெரியாமல் எடுத்து வந்து கண்ணம்மாவிற்கு போன் செய்து பேசுகிறார். அப்போது ஹேமா தூங்கிவிட்டாள் வேறு எதுவும் சொல்லணுமான்னு கேட்க, சத்தம் கேட்டு ஹேமா முழித்து கொண்டார். ஹேமா பாரதியிடம் பேசிவிட்டு வீடியோ கால் செய்கிறார்.

ஹேமாவை பார்த்த மகிழ்ச்சியில் பாரதி அழுதுகொண்டே பேசுகிறார். உன்னை ரொம்ப மிஸ் செய்கிறேன் ஹேமா என வருத்தப்படுகிறார். அங்கே ஏசி இல்லாமல் எப்படி தூங்குறானு பாரதி கேட்க நாங்க பால்கனியில் திறந்த வெளியில் படுத்துருக்கோம். நல்ல காத்து வருதுன்னு ஹேமா சொல்றா. பின்னர் ஹேமா பாரதியிடம் ஒன்று கேட்க, பாரதி கண்ணம்மாவை ஒரு புறம் பார்த்து ஐ லவ் யூ ஆல்வேஸ் அப்படி சொல்ல கண்ணம்மா தனக்கு சொல்வது போல் நினைத்து அதிர்ச்சி அடைகிறார்.

ஜூலை 30 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அட்டவணை – முக்கிய விவரங்கள்!

அதன் பின்னர் சௌந்தர்யாவும், வேணுவும் பாரதி போனை எடுத்துக் கொண்டு போனது, மீண்டும் அனைவரும் தூங்குன பின்னர் கொண்டு வந்து வைத்தது எல்லாம் சொல்லி சிரித்து கொண்டிருக்க, பாரதி கிளம்பி விட்டு அவர் அம்மாவிடம் நான் கிளம்புறேன் ஒரு வேலை இருக்கு ஒரு பிராண்டை பார்க்கணும் அப்படினு சொல்ல சௌந்தர்யா நக்கலுடன் சரி என்று கூறுகிறார்.

ஹேமாவும், லட்சுமியும் படித்துக் கொண்டிருக்க தனக்கு தமிழ் சரியா தெரியாது என ஹேமா சொல்கிறார். பின்னர் கண்ணம்மா திருக்குறள் குறித்தும் அதில் உள்ள அர்த்தங்கள் குறித்தும் விளக்கமாக ஹேமாவிற்கு சொல்லிக் கொடுக்கிறார். மேலும் வாழ்க்கைக்கு தேவையான நல்ல குணங்களையும் ஹேமாவிற்கு கற்றுக் கொடுக்கிறார்.

கொரோனா பாதிப்பில் கேரளா முதல் இடம் – வார இறுதி ஊரடங்கு அமல்!

பின்னர் பாரதி காரில் செல்ல சௌந்தர்யா அவரை பின் தொடர்கிறார். பாரதி ஒரு இடத்தில் காரை நிறுத்தி அங்கே சென்று பூ செடி வாங்குகிறார். ஹேமா தொலைந்து போனப்ப கண்ணம்மாவின் செடிகளை பாரதி உடைத்த காரணத்தினால் கண்ணம்மாவிற்கு செடி வாங்கி வருகிறார். பின்னர் பாரதியின் கார் ஸ்டார்ட் ஆகவில்லை. பின்னால் வந்த சௌந்தர்யா அருகில் சென்று என்னாச்சு பாரதினு கேட்க இத்துடன் இந்த எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!