புது வண்டியில் மயூராவை அழைத்து வரும் பாக்கியா, தப்பித்து செல்லும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!
விஜய் டிவியில் “பாக்கியலட்சுமி” சீரியலில் பாக்கியா புது வண்டியை ராதிகாவிடம் காட்டிவிட்டு மயூராவை தனது வீட்டிற்கு அழைத்து செல்கிறார்.கோபி மயூரா கண்ணில் படாமல் எவ்வாறு தப்பிக்கலாம் என குழப்பத்தில் உள்ளார்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில் பாக்கியா தனது புது வண்டியை செல்வியிடம் காண்பித்து சந்தோஷமடைகிறார். செல்வி அதை பார்த்து சூப்பரா இருக்கு அக்கா என வாழ்த்து தெரிவிக்கிறார். உங்க வீட்டுக்காரருக்கு தீடிர்னு என்னாச்சு என்று செல்வி கேட்க, அவரு நான் தப்பு செய்தால் தான் திட்டுவாரு, நான் வண்டி ஓட்ட கத்துக்க போனப்ப கூட என்னை எதுவும் சொல்லல என்று கூறி சந்தோசப்படுகிறார்.
வண்டியை ஓட்ட சாவியை எடுத்து வருமாறு இனியாவிடம் கூற, வண்டியை ஸ்டார்ட் செய்ய தெரியாமல் முழிக்கிறார். கோபியை அழைத்து வண்டியை ஸ்டார்ட் செய்து தருமாறு கேட்க வண்டி ஓட்ட கத்துகிட்ட ஸ்டார்ட் செய்ய தெரியாத என்று சொல்லி கோபி அங்கிருந்து கிளம்புகிறார். அப்போது எழில் வந்து வண்டியை ஸ்டார்ட் செய்ய கற்றுக் கொடுக்கிறார். பின்னர் இனியா நானும் வண்டி ஓட்டணும் என்று சொல்ல எழில் வண்டி ஓட்ட கற்று தருகிறார்.
ஹேமாவிடம் வீடியோ காலில் பார்த்து கண்ணீர் விடும் பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!
பின்னர் பாக்கியா, வண்டியை காண்பிக்க ராதிகா வீட்டிற்கு செல்கிறார். மயூரா கதவை திறக்க பாக்கியா வாங்கி வந்த சாக்லேட்களை கொடுக்கிறார். பிறகு மயூராவை தனது வீட்டிற்கு அழைக்கிறார். அப்போது ராதிகா வர, தனது புது வண்டியை காட்டுகிறார். நீங்க சொன்னதால் தான் வண்டி ஓட்ட கத்துக்கிட்டேன் எங்க வீட்டுக்கே தெரியாது என்று சொல்கிறார். மயூராவை அழைத்துக் கொண்டு தனது வீட்டிற்கு செல்கிறார். அங்கே கோபி மயூரா கண்ணில் படாமல் தப்பித்து விடுகிறார். ராதிகாவிற்கு போன் செய்து அவரை பார்க்க செல்கிறார். ராதிகா மயூரா இல்லாத நேரத்தில் வருகிறீர்கள். அவளுக்கு தெரிந்தால் என்ன ஆகும் என வருத்தப்படுகிறார். இத்துடன் இந்த எபிசோட் முடிவடைகிறது.
“நாம் இருவர், நமக்கு இருவர்” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் பண்ணுங்க!!