மீண்டும் சமையல் போட்டியில் கலந்து கொள்ளும் சந்தியா – “ராஜா ராணி 2” அடுத்த எபிசோட்!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், கடந்த வாரம் முதல் சந்தியா சரவணனனிற்கு வண்டி வாங்கி கொடுத்து நெருக்கமாக இருப்பது போல காட்டப்பட்டது. இந்நிலையில் அடுத்த வார எபிசோட் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
ராஜா ராணி 2:
ராஜா ராணி 2 எபிசோடில் சரவணன் பழைய வண்டி பழுதாகிவிட அவர் புது வண்டி வாங்க வேண்டும் என நினைக்கிறார். உடனே ஆதி மற்றும் செந்தில் அதை கேலி செய்கிறார்கள். முதலில் வண்டி ஓட்ட கற்றுக்கொள் பின் வாங்கலாம் என கிண்டல் செய்ய சந்தியா அவர் வண்டி வாங்கி உங்க முன் ஓட்டுவார் என சவால் விடுகிறார். பின் சரவணனிற்கு வண்டி வாங்கி அதை அவரே ஓட்டி வருகிறார். பின் சரவணனிற்கும் சொல்லி கொடுக்கிறார். இதனால் குடும்பத்தில் அனைவரும் சந்தோஷத்தில் இருக்க, ஆதி மற்றும் செந்தில் கோவமாக இருக்கிறார்கள்.
“பாரதி கண்ணம்மா” சீரியலில் ஹேமாவும், லட்சுமியும் இணைந்து செய்த ரீல்ஸ் – குவியும் லைக்குகள்!
மறுபக்கம் பார்வதி மற்றும் பாஸ்கரை பிரிக்க விக்கி திட்டமிட்டு கொண்டிருக்கிறார். அவர் பாஸ்கரை பார்க்க கூடாது என மிரட்ட, பாஸ்கரிடம் பார்வதிக்கு உங்களை பிடிக்கவில்லை என சொல்கிறார். இவ்வாறு இருக்க சந்தியாவை அழைத்துக் கொண்டு சரவணன் வண்டியில் செல்ல அதை பார்த்து அர்ச்சனா சிவகாமியிடம் சொல்ல அவர் கடைக்கு வந்து சந்தியாவை திட்டுகிறார். இந்நிலையில் அடுத்த வார எபிசோடில் சிவகாமி சந்தியாவை அப்பளம் பொரித்து எடுத்து வரும்படி சொல்கிறார்.
மீண்டும் சீரியலில் ரீ என்ட்ரி கொடுக்கும் சூப்பர் சிங்கர் பிரபலம் – ரசிகர்கள் உற்சாகம்!
உடனே அவர் சரவணனனை உதவிக்கு அழைக்கிறார். அதை பார்த்த அர்ச்சனா சிவகாமியிடம் இது பற்றி சொல்கிறார். உடனே சிவகாமி சந்தியாவை தன்னுடைய மகன் வெளியே தான் கஷ்டப்பட்டு வேலை பார்க்கிறார். வீட்டில் வந்தும் வேலை வாங்குறியா என சொல்லி சத்தம் போடுகிறார். பின் மீண்டும் ஒரு சமையல் போட்டி இருப்பதாக சந்தியாவிற்கு தகவல் வருகிறது. அவர் கலந்து கொள்வாரா அதில் வெற்றி பெறுவாரா என்பது அடுத்த வார எபிசோடில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.