மீண்டும் சீரியலில் ரீ என்ட்ரி கொடுக்கும் சூப்பர் சிங்கர் பிரபலம் – ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் சவுந்தர்யா பாலா நந்தகுமார். அவர் சீரியலில் நடித்து வந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சூப்பர் சிங்கர் பிரபலம்:
விஜய் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உண்டு. குறிப்பாக 8 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. ஒவ்வொரு சீசனிலும் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் ஆர்மி அமைக்கும் அளவிற்கு உண்டு. மேலும் சிலருக்கு சினிமா வாய்ப்புகளும் கிடைத்துள்ளது. அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் சவுந்தர்யா பாலா நந்தகுமார். அவர் இந்த நிகழ்ச்சிக்கு பின் சீரியலில் நடிக்கத் தொடங்கினார்.
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நமீதா மாரிமுத்து செய்த காரியம் – வைரலாகும் வீடியோ!
இவர் நடித்த பகல் நிலவு சீரியல் மக்களிடம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. மேலும் பல குறும்படங்களில் அவர் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் 6 மெழுகுவர்த்திகள் மற்றும் கொடிவீரன் போன்ற படங்களில் பாடியுள்ள அவர் கபாலி, மாஸ்டர், வணக்கம் டா மாப்ளே போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் சமீபத்தில் வயிற்றில் அறுவை சிகிச்சை நடக்க இருப்பதாக தனது சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்தார். அதன் பின் அவர் சீரியலில் நடிக்கவில்லை.
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 போட்டியாளர்களிடையே கடும் வாக்குவாதம் – வெளியான அதிரடி ப்ரோமோ!
தற்போது அவர் மீண்டும் சீரியலில் களமிறங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜீ தமிழில் நேற்று ஒளிபரப்பான புதுப்புது அர்த்தங்கள் திருமண வைபோகம் ஸ்பெஷல் எபிசோடில் மணமகளாக நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் சீரியலில் தொடருமா? அல்லது விருந்தாளியாக நடித்திருக்கிறாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். மீண்டும் சவுந்தர்யா சீரியலில் ரீஎன்ட்ரி கொடுப்பதால் அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.