தமிழகத்தின் 18 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை!
கடந்த வாரம் முதல் தமிழகம் முழுவதும் அதிக அளவிலான மழை பெய்து வந்த நிலையில், இன்று மற்றும் நாளை லேசான மழை மட்டுமே பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
வானிலை அறிக்கை:
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து, புயலாக மாறியதால் தமிழகத்தில் கடந்த வாரம் முழுவதும் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்து வந்தது. இதனால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், சிட்ரங் புயல் கரையை கடந்துள்ள நிலையில், தமிழகத்தில் மழை அளவு குறைந்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இதனால் தென் தமிழக மாவட்டங்களான ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை போன்ற மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் திடீரென முடங்கிய வாட்ஸ் அப் – கடும் அவதியில் பயனர்கள்!!
Exams Daily Mobile App Download
இதை தவிர அக்டோபர் 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மட்டும் குறைவான அளவு மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெப்பநிலை மிதமான அளவில் மட்டுமே இருக்கும் என்றும், மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.