ரேஷன் அட்டைதாரர்களுக்கு கோதுமைக்கு பதில் ராகி? தகவல் வெளியீடு!
கேரள மாநிலத்தில் தற்போது கொரோனாவை தொடர்ந்து குரங்கு அம்மை பரவி வருவதை அடுத்து அம்மாநில சுகாதார துறையினர் மலையோர மாவட்டங்களில் வசிக்கும் பழங்குடி மக்களிடம் ஆய்வு மேற்கொண்டனர். இதில் அப்பகுதி மக்களுக்கு இரத்த சோகை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை சரி செய்ய கேரள அரசு ரேஷன் கடைகள் மூலம் சத்தான உணவு பொருட்கள் வழங்க முடிவு செய்துள்ளது.
ரேஷன் கடை:
இந்தியாவில் ரேஷன் கார்டு திட்டம் மூலம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் குறைவான விலையில் வீட்டு உபயோகப் பொருட்களை பெற்று வருகின்றனர். மேலும் அந்தந்த மாநில அரசுகள் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை ரேஷன் கடைகள் வாயிலாக வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது கேரளாவில் உள்ள ரேஷன் கடைகளில் கோதுமைக்கு பதிலாக சத்தான ராகி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று கடந்த வருடம் கோரத்தாண்டவம் ஆடியது. அதன் தொடர்ச்சியாக தற்போது வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் முலமாக குரங்கு அம்மை பரவி வருகிறது.
Exams Daily Mobile App Download
இதுவரை 2 பேருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தடுக்க கேரள சுகாதாரத்துறை தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் கேரள மாநிலத்தின் மலையோர மாவட்டங்களில் ஆய்வு செய்த சுகாதாரத்துறையினர் அம்மக்களிடம் ரத்த சோகை இருப்பதை கண்டறிந்தனர். இதனை குணப்படுத்த மக்கள் சத்தான உணவு பொருட்களை உண்ண வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். அதனால் மலையோர மக்களுக்கு ரேஷன் கடைகளில் மத்திய அரசு வழங்கும் கோதுமைக்கு பதில் ராகி, பருப்பு மற்றும் கொண்டைக்கடலை ஆகிவற்றை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – விரைவில் அகவிலைப்படி & சம்பள உயர்வு
முதல் கட்டமாக இந்த உணவு பொருள்களை கேரளாவின் வயநாடு, இடுக்கி மற்றும் பாலக்காடு ஆகிய 3 மாவட்டங்களில் விநியோகம் செய்ய உள்ளது. ஏனெனில் இந்த மாவட்டங்களில் தான் ரத்த சோகை நோய் பாதிப்பு அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது அதனால் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ரேஷன் கடைகளில் ராகியை வினியோகிக்க தேவையான ராகி மற்றும் கொண்டை கடலை வகைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கேரள அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.