உன் பாச்சா என்கிட்ட பலிக்காது டா.. கோபிக்கு வில்லனாக வந்த ராதிகாவின் முன்னாள் கணவர் ராஜேஷ்!
பாக்கியலட்சுமி தொடரின் ரசிகர்கள் பலரும் கோபி ராதிகாவின் திருமணம் நடக்கக்கூடாது என்று தான் எதிர்பார்த்து வருகின்றனர். அது குறித்த பல ட்விஸ்ட்கள் இனி சீரியலில் வர உள்ளது.
பாக்கியலட்சுமி:
ஒரு கணவர் எப்படி எல்லாம் இருக்க கூடாதோ அதற்கு ஒரு உதாரணமாக திகழ்கிறார் கோபி. பாக்கியாவை இத்தனை ஆண்டுகள் திட்டி தீர்த்து வந்த கோபி தற்போது தன் கல்லூரி பருவ காதலியான ராதிகாவை திருமணம் செய்யும் வரை சென்று விட்டார். மேலும் பாக்கியாவும் தனி ஒரு ஆளாக கோபியின் குடும்பத்தை பார்த்துக் கொள்கிறார்.
தன் முன்னாள் கணவரின் திருமணத்தில் தான் தான் சமைக்கிறோம் என்று தெரிந்தும், செய்யும் வேலை தான் முக்கியம் என்ற முடிவை பாக்கியா எடுக்கிறார். தான் எவ்வளவு சொல்லியும் கோபி கேக்காததால் மன உளைச்சலில் இருக்கும் ராமமூர்த்தியையும் சமாதானப்படுத்தி விடுகிறார் பாக்கியா.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் தான் சீரியலில் அடுத்து ஒரு ட்விஸ்ட் ஒன்று வர உள்ளது. அதாவது ராதிகாவின் முன்னாள் கணவர் ராஜேஷ் மண்டபத்திற்கு வந்து கோபியிடம் கடும் சண்டை போடுகிறார். தன் அப்பா ராமமூர்த்தியை சமாளித்தது போல ராஜேஷை கோபியால் சமாளிக்க முடியவில்லை. கோபி எப்படி திக்கி திணற போகிறார் என்று இனிவரும் எபிசோடுகளில் நமக்கு தெரியவரும்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்