கோபியை பற்றிய அனைத்து உண்மைகளையும் கூறும் ராதிகா, அதிர்ச்சியில் பாக்கியா – ப்ரோமோ ரிலீஸ்!
கோபியை பற்றிய அனைத்து உண்மைகளும் ராதிகாவிற்கு தெரிய வருகிறது. இந்நிலையில் தற்போது பாக்கியாவிடம் உங்களது கணவர் கோபி தான் என்னை ஏமாற்றினார் என அனைத்து உண்மையையும் கூறும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபியை பற்றிய அனைத்து உண்மைகளையும் ராதிகா அறிந்து கொள்கிறார். அதாவது கோபி எப்பொழுது வீட்டிற்கு வந்தாலும் உங்கள் வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள் என ராதிகா சண்டை போடுகிறார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி கோபி நன்றாக குடித்துவிட்டு ராதிகாவின் வீட்டிற்கு வருகிறார். குடிபோதையில் என்ன செய்வதென்று தெரியாமல் கோபியும் பாக்கியாவும் இருக்கும் புகைப்படத்தை எடுத்து ராதிகாவிடம் கோபி காட்டுகிறார்.
Exams Daily Mobile App Download
பாக்கியா டீச்சர் தான் எனது மனைவி என ராதிகாவிடம் கூறுகிறார். இத்தனை நாட்களாக நீங்கள் என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டீர்கள் என ராதிகா கதறி அழுகிறார். இது மட்டுமல்லாமல் குடி போதையில் தள்ளாடியபடியே பாக்கியா வீட்டிற்கும் சென்று ராதிகாவிடம் பேசுவது போல் உன்னையும் குழந்தையும் என்னால் விட்டு இருக்கவே முடியாது என புலம்புகிறார். இதனால் கண்டிப்பாக கோபிக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது என்பது பாக்கியாவிற்கு தெரிய வருகிறது.
குக் வித் கோமாளியில் இந்த வாரம் வெளியேற போவது யார் தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!
பின்பு போதை தெளிந்ததும் இரவில் என்ன நடந்தது என்கிற அனைத்தையுமே கோபி மறந்துவிடுகிறார். பின்பு வழக்கம் போல ராதிகா வீட்டிற்கு கோபி வர கோபியை ராதிகா பயங்கரமாக திட்டி அனுப்புகிறார். பின்பு, ராதிகாவை பார்க்க பாக்கியா ராதிகாவின் வீட்டிற்கு வருகிறார். பாக்கியாவிடம் கோபிதான் ஏமாற்றினார் என கோபியின் பெயரை மட்டும் கூறாமல் மறைமுகமாக அதைப் பற்றிப் பேசுகிறார். உடனே பாக்கியா ராதிகாவிற்கு ஆதரவாக அவர் உன்னை பயங்கரமாக காதலிக்கிறார். அதனால் தான் இதுமாதிரி செய்துகொண்டிருக்கிறார் என கூறுகிறார். இவ்வளவு அப்பாவியாக பாக்கியா இருக்கிறாரே என நினைத்து இதற்கு மேலும் பாக்கியாவை ஏமாற்றக் கூடாது என நினைத்து உங்களது கணவர்தான் என்னை ஏமாற்றினார் என அனைத்து உண்மையையும் கூறும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.