மயூரா மீது சத்தியம் செய்து மன்னிப்பு கேட்கும் ராதிகா, மன்னிப்பாரா பாக்கியா? சீரியலில் அடுத்து வருபவை!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் கோபி ராதிகா உறவை பற்றி தெரிந்து கொண்டு பாக்கியா ராதிகாவிடம் நியாயம் கேட்க செல்கிறார். ஆனால் ராதிகா தான் தெரியாமல் தவறு செய்துவிட்டதாக மயூரா மீது சத்தியம் செய்து சொல்கிறார்.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் சுவாரசியமான காட்சிகளுடன் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. பாக்கியாவை கோபி இத்தனை நாள் ஏமாற்ற ஆனால் தற்போது பாக்கியாவிற்கு எல்லா உண்மையும் தெரிந்து விடுகிறது. ராதிகா கோபி உறவை பற்றி தெரிந்து கொண்டு பாக்கியா மிகுந்த மன வேதனையில் இருக்கிறார். அவர் வீட்டை விட்டு வந்த நிலையில் முதலில், இனியா, ஈஸ்வரி, ராமமூர்த்தி என அனைவரும் வந்து பாக்கியாவை கூப்பிடுகின்றனர்.
Exams Daily Mobile App Download
ஆனால் பாக்கியா தன்னுடைய முடிவில் பிடிவாதமாக இருக்கிறார். மறுபக்கம் ராதிகா மும்பை செல்வதில் தாமதம் ஏற்படுகிறது. மயூராவிற்கு உடம்பு சரியில்லாமல் இருப்பதால் ராதிகா இன்னும் கிளம்பாமல் இருக்கிறார். இதற்கிடையே பாக்கியா ராதிகாவிடம் நியாயம் கேட்க வருகிறார். அப்போது பாக்கியா அவர் செய்தது எனக்கு துரோகம் என்றால் நீங்க செய்தது என்ன என கேட்கிறார். ஆனால் ராதிகா குற்ற உணர்ச்சியால் எனக்கு தெரியாமல் இந்த தவறு நடந்துவிட்டது என சொல்கிறார்.
பாக்கியா, ராதிகா சொல்வதை நம்பாமல் இருக்கிறார். அப்போது மயூரா வர உண்மையாகவே எனக்கு காய்ச்சல் என சொல்ல, ராதிகா மயூராவின் தலையில் கை வைத்து எனக்கு உண்மையாகவே கோபி உங்களுடைய கணவர் என்ற உண்மை தெரியாது என சொல்ல, அதை பாக்கியா நம்புகிறார். இதற்கிடையே கோபி மீண்டும் பாக்கியாவை ஏமாற்றி வீட்டிற்கு வர வைத்து ராதிகாவை கல்யாணம் செய்ய திட்டமிடுகிறார். அது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.