தமிழக அரசு பேருந்துகளில் இப்படி ஒரு வசதியா? வலுக்கும் கோரிக்கை!
தமிழக அரசு பேருந்துகளில் பொதுமக்கள் பயணிக்க ஏதுவாக போக்குவரத்து துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது QR CODE வசதியை கொண்டு வர கோரிக்கை எழுந்துள்ளது.
கியூ ஆர் கோட் வசதி:
தமிழக அரசு பேருந்துகளில் தற்போது மகளிர் இலவசமாக பயணம் செய்ய அரசு வழிவகை செய்துள்ளது. மேலும் வெகு தூரங்களுக்கு பயணிக்கும் பயணிகள் அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இணையதளம் மற்றும் செயலிகள் வாயிலாக பயணிகள் டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம். இந்த நிலையில் கூடுதல் வசதியாக அரசு பேருந்துகளில் QR CODE கொண்டு வர கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான ஆயத்த புத்தாக்க பயிற்சி – வெளியான அப்டேட்!
அரசு பேருந்துகளில் நடத்துனர் மற்றும் பயணிகளுக்கிடையே அவ்வப்போது சில்லறை பிரச்சனை ஏற்படுகிறது. பெரும்பாலும் காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகள் அவசரமாக பயணம் செய்கின்றனர். இத்தகைய நேரத்தில் டிக்கெட்டிற்கான சரியான சில்லறையை வைத்திருப்பதில்லை. சில நேரங்களில் நடத்துனரிடமும் சில்லறை இல்லாமல் போய் விடுகிறது. இத்தகைய சூழலை கருத்தில் கொண்டு அரசு பேருந்துகளில் கியூ ஆர் கோட் முறையை அறிமுகப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.