தமிழக மாணவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை – கல்லூரி முதல்வர்களுக்கு பறந்த உத்தரவு!
தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் அனைத்து மாணவர்களும் பயன்பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
புதுமைப்பெண் திட்டம்:
தமிழக அரசு பள்ளியில் பயிலும் மாணவிகள் பள்ளி படிப்பை முடித்து அடுத்த கட்டமாக உயர்கல்வியை பெற வேண்டும் என்ற நோக்கில் புதுமைப்பெண் என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று கல்லூரிகளுக்கு சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது.
Follow our Instagram for more Latest Updates
இத்திட்டத்தின் மூலம் மாணவிகள் உயர்கல்வி கற்கும் நிலை உருவாகும். அத்துடன் இடைநிற்றல் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இந்த திட்டத்தில் மாணவிகளை சேர்ப்பதற்கான பணிகள் கடந்த ஜூலை மாதம் தொடங்கியது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தில் சேராமல் விடுபட்ட மாணவர்கள் குறித்த கலந்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
மக்கள் கவனத்திற்கு.. ATM முதல் பான் கார்டு வரை.. ஜன.1 முதல் அனைத்து விதிகளும் மாற்றம்!!
Exams Daily Mobile App Download
இந்த கூட்டத்தில் அனைத்து கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர். அப்போது பேசிய விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் புதுமைப்பெண் திட்டத்தில் கீழ் விண்ணப்பிக்கும் கல்லூரி மாணவிகள் தங்கள் ஆதார், வங்கி கணக்கு எண்ணுடன் ஆகியவற்றுடன் செல்போன் எண் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். மேலும் இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாரத ஜனதா வங்கி, கனரா வங்கிகளில் மட்டுமே மாணவர்கள் கணக்கு வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்த திட்டத்தில் மாணவிகள் யாரும் விடுபடாத வகையில் பார்த்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.