மக்கள் கவனத்திற்கு.. ATM முதல் பான் கார்டு வரை.. ஜன.1 முதல் அனைத்து விதிகளும் மாற்றம்!!
வர இருக்கும் புத்தாண்டு முதல் பல்வேறு முக்கிய மாற்றங்கள் இந்தியாவில் அனைத்து துறைகளிலும் வர உள்ளது. அவை குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
முக்கிய மாற்றங்கள்:
2023ம் ஆண்டு இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. ஜனவரி முதல் அரசு மற்றும் பிற துறைகளில் உள்ள செயல்பாடுகளில் முக்கிய மாற்றங்கள் அமலாக உள்ளது. இவை அனைத்தும் மக்களின் அன்றாட வாழ்கை முறையில் அதிரடி விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அவை என்னென்னெ மாற்றங்களை கொண்டு வர உள்ளது என காணலாம்.
Follow our Instagram for more Latest Updates
கிரெடிட் கார்டு:
கிரெடிட் கார்டு பயன்படுத்தும் பயனர்கள் தங்களின் ரிவார்டு புள்ளிகள் அனைத்தையும் டிசம்பர் 31ம் தேதிக்குள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏனென்றால் ஜனவரி 1ம் தேதி ரிவார்டு புள்ளிகள் அனைத்தும் காலாவதி ஆகிவிடும்.
தமிழகத்தில் ஜாதி சான்றிதழ் விரைவில் கிடைக்கும் – முதல்வர் பிறப்பித்த முக்கிய உத்தரவு!
Exams Daily Mobile App Download
காப்பீடு பிரிமியம்:
IRDAI புதிய விதிகளின் படி ஜனவரி 1, 2023 முதல் இன்சூரன்ஸ் பிரிமியம் தொகை அதிகரிக்க உள்ளது. இன்சூரன்ஸ் தொகை அதிகரித்துள்ளது காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
க்ரோம் செயல்பாடு:
Windows 7 மற்றும் 8.1 பதிப்புகள் உள்ள லாப்டாப்பில் பிப்ரவரி 7, 2023 முதல் க்ரோம் செயல்படாது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பான் – ஆதார் கார்டு இணைப்பு:
பான் மற்றும் ஆதார் கார்டு இணைப்பு குறித்து மத்திய அரசு பல முறை கால அவகாசம் அளித்துள்ளது. ஆனால் இதற்கு கடைசி வரம்பாக மார்ச் 31 ம் தேதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு புத்தாண்டு பிறந்து சில மாதம் அவகாசம் இருக்கும் போதிலும், முக்கிய அம்சமாக கருதப்படுகிறது.
கார்டு விவரங்கள்:
இதுவரை கூகுள் நமது அனைத்து கார்டு விவரங்களையும் சேமித்து வைத்து, நமது செயல்பாட்டை எளிதாக்கி வந்தது. ஆனால் ஜனவரி 1ம் தேதி முதல் நமது ஆன்லைன் கட்டண விவரங்களை நாம் ஒவ்வொரு முறையும் பதிவிட வேண்டியதிருக்கும். பண பரிவர்த்தனையில் பாதுகாப்பை உறுதி செய்ய RBI இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.