புதுவையில் மார்ச் 13 முழு பட்ஜெட் தாக்கல் – அரசு அறிவிப்பு.. பணிகள் தீவிரம்!
புதுவையில் 2023 – 2024 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் மார்ச் 13 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அதற்கு முன்னதாக மார்ச் 9ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.
பட்ஜெட் :
இந்தியாவில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்தது. அதனைத் தொடர்ந்து தற்போது புதுவையில் மார்ச் 13ஆம் தேதி முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக புதுவையில் மார்ச் மாதத்தில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்தது.
அரசு தொழில் பயிற்சி நிறுவனங்களில் சேரும் பெண்களுக்கு ரூ.2500 உதவித்தொகை – மத்திய அரசு அறிவிப்பு!
Follow our Instagram for more Latest Updates
இந்த நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு 2023 ம் ஆண்டில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக வரும் மார்ச் 9ம் தேதி காலை 9. 45 மணிக்கு ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கவுள்ளது. இதில் புதுவை ஆளுநர் பங்கேற்று உரையாற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது புதுவை அரசு தீவிரமாக பட்ஜெட்டை தயாரிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் பட்ஜெட்டிற்கான திட்டக்குழு கூட்டத்தில் புதுவையில் 2023 -2024ம் நிதியாண்டிற்கு பட்ஜெட் தொகையாக11 ,600 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தற்போது மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பபட்டுள்ளது. அதனை தொடர்ந்து மார்ச் 13ஆம் தேதி 2023 – 2024 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download