அரசு தொழில் பயிற்சி நிறுவனங்களில் சேரும் பெண்களுக்கு ரூ.2500 உதவித்தொகை – மத்திய அரசு அறிவிப்பு!

0
அரசு தொழில் பயிற்சி நிறுவனங்களில் சேரும் பெண்களுக்கு ரூ.2500 உதவித்தொகை - மத்திய அரசு அறிவிப்பு!
அரசு தொழில் பயிற்சி நிறுவனங்களில் சேரும் பெண்களுக்கு ரூ.2500 உதவித்தொகை - மத்திய அரசு அறிவிப்பு!
அரசு தொழில் பயிற்சி நிறுவனங்களில் சேரும் பெண்களுக்கு ரூ.2500 உதவித்தொகை – மத்திய அரசு அறிவிப்பு!

மத்திய அரசு சார்பில் அரசு தொழில் பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்துள்ள பெண்களுக்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் வரை இருந்தால் அவர்களுக்கு ரூ.2500 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதவித்தொகை அறிவிப்பு

மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் சார்பில் இளைஞர்களுக்கு திறன் பயிற்சிகளை வழங்கவும் அவர்களை தொழில் முனைவோராக மாற்றவும், அவர்களை வேலை வாய்ப்புகளுக்கு அதிக அளவில் தகுதி உடையோராக மாற்ற மத்திய அரசு பல தொழில் பயிற்சி நிறுவனங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் அந்த நிறுவனங்களில் பெண்கள் பலர் பயிற்சி பெற்று வருகின்றனர். அவரை ஊக்குவிக்கும் நோக்கில் அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அரசு வேலையில் 65,000 காலிப்பணியிடங்கள் – ஹரியானா பட்ஜெட்டில் அட்டகாசமான அறிவிப்புகள் வெளியீடு!

அதன் படி மத்திய அரசின் தொழில் பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து பயிற்சி பெற்று வரும் பெண்களுக்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் வரை இருந்தால் அவர்களுக்கு உதவித்தொகையாக ரூ. 2500 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகை ஏழை எளிய பெண்களின் எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும், இந்த பயிற்சி மூலம் பெண்கள் சுயமாக தொழில் தொடங்க இது வழிவகை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!