ஆதிதிராவிட & பழங்குடி மக்களுக்கான இறுதி ஈமச்சடங்கு உதவி தொகை உயர்வு – அரசின் அதிரடி உத்தரவு!
தற்போது ஆதிதிராவிட மற்றும் பழங்குடி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அரசு செய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இறுதி ஈமச்சடங்கு உதவி தொகையை உயர்த்தி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இறுதி ஈமச்சடங்கு:
புதுச்சேரி அரசு வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. அந்த வகையில் ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர்களுக்கென பல்வேறு புதிய திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. இதில் குறிப்பாக ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் பட்டா மாற்றம், விடுபட்டவர்களுக்குப் பட்டா வழங்கப்பட்டு வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
இதே போல், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள விடுபட்டவர்களுக்கு சிவப்பு நிற ரேஷன் அட்டை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு வகையான நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஆதிதிராவிட மற்றும் பழங்குடி மக்களுக்கு உதவும் வகையில் இறுதி ஈமச்சடங்கிற்காக உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்தியா – இலங்கை இடையே விரைவில் கப்பல் போக்குவரத்து – மந்திரி வெளியிட்ட தகவல்!
Exams Daily Mobile App Download
தற்போது இறுதி ஈமச்சடங்கிற்கான உதவி தொகை 15 ஆயிரம் வரை வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகையை 25 ஆயிரமாக உயர்த்தி புதுச்சேரி முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி ஆதிதிராவிட மற்றும் பழங்குடி மக்களுக்கான இறுதி ஈமச்சடங்கு உதவி தொகை ரூ. 25 ஆயிரம் என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா அறிவித்துள்ளார்.