இந்தியா – இலங்கை இடையே விரைவில் கப்பல் போக்குவரத்து – மந்திரி வெளியிட்ட தகவல்!

0
இந்தியா - இலங்கை இடையே விரைவில் கப்பல் போக்குவரத்து - மந்திரி வெளியிட்ட தகவல்!
இந்தியா - இலங்கை இடையே விரைவில் கப்பல் போக்குவரத்து - மந்திரி வெளியிட்ட தகவல்!
இந்தியா – இலங்கை இடையே விரைவில் கப்பல் போக்குவரத்து – மந்திரி வெளியிட்ட தகவல்!

இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையே பயணிகள் கப்பல் சேவை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை மந்திரி தகவல் தெரிவித்துள்ளார். ஜனவரி மாதம் முதல் இச்சேவை நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் கப்பல்:

இலங்கை அரசு கடல் வழி போக்குவரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது இந்தியாவுடனான பயணிகள் கப்பல் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து ஆலோசிக்கப்பட்டு தற்போது முதல் கட்டமாக காங்கேசன் – பாண்டிச்சேரி இடையே பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்படவுள்ளதாக இலங்கை மந்திரி தெரிவித்துள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

தமிழகத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் இலங்கை யாழ்ப்பாணத்தில் வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்கள் இலங்கையில் இருந்து தமிழகம் சென்று வர ஏதுவாக இந்த பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளது. இந்த கப்பல் சேவை 2023 ஜனவரி மாதம் தொடங்கப்படும். இதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது என்று இலங்கை மந்திரி நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை தடுக்க புதிய சட்டம் – மத்திய அமைச்சர் உறுதி!

Exams Daily Mobile App Download

தற்போது காங்கேசன் – பாண்டிச்சேரி இடையேயான கப்பலில் 300 பயணிகளை அனுமதிக்கும் வகையில் கப்பலை தயார் செய்ய முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு பயணியும் சுமார் 100 கிலோ எடையுள்ள பொருட்களை எடுத்து செல்ல முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!