வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. பொங்கல் களைக்கட்ட போகுது – ரூ.500 மதிப்புள்ள பரிசுத்தொகுப்பு!
அடுத்த ஆண்டு வர இருக்கும் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கடைகள் மூலம் என்ன பரிசு வரப்போகிறது என அறிந்துகொள்ள மக்கள் ஆர்வமாக உள்ளனர். தற்போது புதுச்சேரி அரசு அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பொங்கல் பரிசு:
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் பொங்கலுக்கு பணப்பரிசு வழங்கப்பட்டது. ஆனால் சென்ற வருடம் திமுக அரசு பொங்கல் வைக்க தேவையான 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பை ரேஷன் அட்டை தாரர்களுக்கு வழங்கியது. இது பின்னாளில் அதிக எதிர்ப்பை உண்டு செய்ததது. அதாவது அந்த பொருட்களை தரமற்றதாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
Follow our Instagram for more Latest Updates
இதனால் இந்த வருடம் தமிழ்நாடு அரசு ரூ.1000 மட்டும் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியது. இது இருப்பினும் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் மட்டுமே தமிழக அரசின் நிலைப்பாடு நமக்கு தெரியவரும். இந்நிலையில் புதுச்சேரி அரசு பொங்கல் பண்டிகைக்கு வழங்கவுள்ள பொருட்கள் குறித்த விவரத்தை வெளியிட்டுள்ளது.
புதிய மருந்து விலைக் கொள்கை.. இந்தியாவில் மாற்றியமைக்கப்படும் 127 மருந்துகளின் விலை!!
Exams Daily Mobile App Download
அதன்படி வரும் பொங்கல் பண்டிகைக்கு புதுச்சேரியில் ரூ.500 மதிப்புள்ள இலவச பொங்கல் தொகுப்பை வழங்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. அந்த பரிசு தொகுட்பில் கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, பாசி பருப்பு, வெள்ளம், உளுந்து, முந்திரி, பச்சரிசி,திராட்சை,ஏலக்காய் உள்ளிட்ட பொருட்கள் இடம்பெறும்.