புதிய மருந்து விலைக் கொள்கை.. இந்தியாவில் மாற்றியமைக்கப்படும் 127 மருந்துகளின் விலை!!
இந்தியாவில் தேசிய மருந்து விலை கொள்கையால் தற்போது 127 வகை மருந்துகளின் விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாராசிட்டமால் மாத்திரையின் விலை கணிசமாக குறைந்துள்ளது.
மருந்துகளின் விலை:
இந்தியாவில் கொரோனாவுக்கு பிறகு பல வித புதிய நோய்கள் வந்த வண்ணம் உள்ளது. இதனால் மக்களிடம் மருந்து பொருட்களின் தேவை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தேசிய மருந்து விலை கொள்கையால் மருந்துகளின் விலை மாற்றியமைக்கபட்டுள்ளது. அண்மையில் சில நிறுவனங்களின் காப்புரிமை காலாவதியாவதால் சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்களுக்கான 45 வகை மருந்துகளின் விலையை தேசிய மருந்து விலை நிர்ணயம் மாற்றியமைத்தது.
Follow our Instagram for more Latest Updates
அதனை தொடர்ந்து தற்போது பாராசிட்டமால் உள்ளிட்ட 127 மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படும் இந்த பாராசிட்டமால் மாத்திரை தற்போது ரூ. 2.3க்கு விற்பனையாகி வருகிறது இந்த விலை குறைப்பினால் பாராசிடமால் மாத்திரை ரூ.1.8 காசுகளுக்கு விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தீவிரமாகும் கொரோனா கட்டுப்பாடுகள்..BF.7 வைரஸ் பரவல் எதிரொலி – முதல்வர் அறிவுறுத்தல்!
Exams Daily Mobile App Download
இந்த விலை குறைப்பு மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நீரிழிவுக்கு கொடுக்கப்படும் மெட்ஃபார்மின் ரூ.1.8 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மெட்பார்மின் மாத்திரைகளின் விலை நடப்பு ஆண்டில் மட்டும் பல முறை மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.